தருமபுரி, பிப்.10- சிறிய ரக செயற்கைக்கோள் வடிமைப்பில் ஈடுபட்ட தரும புரி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோர் வாழ்த்து தெரி வித்தனர். தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. இஓஎஸ்-07 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து திங்களன்று எஸ்எஸ்எல்வி - டி2 ராக்கெட் விண்ணில் ஏவபட் டுள்ளது. இஓஎஸ்-07 செயற்கைக்கோளானது கடலோர நிலப் பயன்பாடு மற்றும் ஒழுங்குமுறை, நகர்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரை படம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக் கும். இதைத் தவிர மாணவர்கள் தயாரித்த, இரு வேறு சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப் பட்டுள்ளன. இதில், மாணவர்கள் தயாரித்த சிறிய ரக செயற்கைக் கோளில் வடிவமைப்பில், தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 9 ஆம் வகுப்பை சேர்ந்த லாவண்யா, 10 ஆம் வகுப்பை சேர்ந்த தாரணி, தீபிகா, மேகாஸ்ரீ, ஹரித்தா, சாமினி, வீரேஸ்வரி, காவியா மற்றும் 11 ஆம் வகுப்பைச் சேர்ந்த சத்யவாணி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இதையடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் செயற்கோளை நேரில் காண, இஸ்ரோ இவர்க ளுக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, அங்கு சென்ற 10 மாணவியர்களுக்கும், அவர்களுடன் செல்லும் ஆசிரி யர்கள் பேபி, உஷா, வளர்மதி ஆகியோருக்கு, பள்ளி தலை மையாசிரியர் தெரசாள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.