districts

மாணவர்கள் மோதல் - ஒருவர் பலி

கோவை, ஜன.11- கோவையில் பள்ளி மாணவர்கள் இருதரப்பாக மோதிக் கொண்ட சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை ஆலாந்துறை அருகே அரசு பள்ளியில் பயின்று  வரும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து கடந்த சனிக்கிழமையன்று ஒருவருக்கொருவர் தாக்கிக்  கொண்டனர். அப்போது அப்பள்ளியில் படித்த முன்னாள்  மாணவர் இரண்டு பேர் கத்தியால் குத்தியதில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில், இதில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டிருந்த சக்திவேல் என்பவரது மகன் நந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி யடைந்த அவரது  உறவினர்கள் நந்தகுமாரின் உடலை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த னர்.