districts

img

அரசுப்பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

உதகை, ஜூன் 13- உதகை அருகே 24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காததை கண் டித்து அரசு உயர்நிலைப்பள்ளியை மலைவேடர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்களுடன் முற் றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை, உல் லத்தி ஊராட்சியில் பன்னிபுரா, ஏக் குனி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மலைவேடர் இனத்தைச் சேர்ந்த மக்கள் கணிச மாக வசித்து வருகின்றனர். இந்நிலை யில், கோடை விடுமுறைக்கு பிறகு  திங்களன்று பள்ளிகள் திறக்கப்பட் டன. இதில் ஏக்குனி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் சென்ற போது, பன்னிபுரா, ஏக்குனி பகுதி மலைவேடர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சாதி  சான்றிதழ் வழங்காததை கண்டித்து  ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளியை திடீரென முற்றுகையிட்டனர். மேலும், அப்பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை வகுப்புகளிலிருந்து வெளியே அழைத்து வந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர் கள் கூறுகையில், தமிழ்நாட்டிலுள்ள பழனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மலை  வேடர் இன மக்கள் வசித்து வருகி றோம். கடந்த 1999 ஆம் ஆண்டு வரை  எங்களுக்கு இந்து மலைவேடர் பழங்குடியினர் என குறிப்பிட்டு சாதி  சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 24 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்கவில்லை. இத னால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எங்களின் குழந்தைகள் எந்த வேலைக் கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் படித்து என்ன பயன்? லட்சி யத்துடன் படிக்கும் மாணவர்கள் எதிர் காலம் தொடர்ந்து கேள்விக்குறியா கவே உள்ளது. இதனால் பள்ளிக்கூ டங்களில் படிக்கும் எங்கள் குழந்தை களின் மாற்று சான்றிதழை கேட்டு  பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பங் கள் அளித்துள்ளோம், என்றனர். இதுகுறித்து தகவலறிந்த உதகை  வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டக்காரர் களுடன் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அப்போது தங்களது கோரிக்கையை அரசின் கவனத் திற்கு கொண்டு சென்று உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளிக்கப்பட்டது. அதேசமயம் நடவ டிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மலை  வேடர் இன மக்கள் தெரிவித்தனர்.