districts

img

ஆசிரியர் காலிப் பணிடங்களை நிரப்ப மாணவர் சங்கம் கோரிக்கை

கோவை, மார்ச் 17- கோவைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு  உதவி பெறும் கல்லூரியில் ஆசிரியர் காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் செயல் பட்டு வரும் சிபிஎம் என்ற அரசு உதவி பெறும் கல்லூரியில்  உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப  வேண்டும். கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்ப டுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந் திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி இணை இயக்குநரிடம் மனு அளித்தனர். அம்மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், வரும் திங்கள்கிழமைக்குள் உரிய தீர்வு காணப்படும் என்று  உறுதியளித்தார். முன்னதாக, இந்திய மாணவர் சங்க கிளைத் தலைவர் பிரணவ் தலைமையில், மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா,  மாவட்ட நிர்வாகி மது சங்கர் மற்றும் மாணவ, மாணவி கள் பலர் அம்மனுவை அளித்தனர்.