உதகை, அக்.8- கோக்கால் பழங்குடியின கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட பள்ளி கட்டடங்கள் தற்போது வரை கட்டப்படாத தால், 290 மாணவர்களை பள்ளிக்கு அனுப்பா மல் 2 ஆவது நாளாக பெற்றோர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கோக்கால் பகுதியில் ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் கோக்கால், கண்ணேரி மூக்கு, தூப கண்டி, கக்கஞ்சி நகர், செலக்கல் உள்ளிட்ட 6 கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் பட்டியலின மக்களை சார்ந்தவர்க ளின் குழந்தைகள் என 290 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு இப்பள்ளி கட்டிடம் மோச மாக இருந்ததால் கடந்த 2022 ஆம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கபட்டது. ஆனால், புதிய கட்டிடம் கட்டபடும் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில், இது வரை கட்டிடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், மாணவர்கள் கடும் அவதிப்படு கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் பல முறை கூறியும் தற்போது வரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து திங்களன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கோக் கால் பள்ளியில் படிக்கும் 290 மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் வீடு களிலேயே வைத்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த உதகை ஆர்.டி.ஓ. மகாராஜா மற்றும் பள்ளி கல்வித்துறை அதி காரிகள் மற்றும் காவல் துறையினர் மாணவர் களின் பெற்றோர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் பலன் அளிக்க வில்லை. இந்நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாயன்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வகுப்பறை வெறிச் சோடி காணப்பட்டது. ஆசிரியர்கள் விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இத னால், செவ்வாயன்று கற்றல் கற்பித்தல் பணி கள் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கள் கூறுகையில், புதிய பள்ளி கட்டிடம் கட்ட இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்கின்றனர். ஆனால், ஒரு வார காலத்திற்குள் பணியை தொடங்காவிட்டால் நாங்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம், என்றனர்.