ஈரோடு, மார்ச் 15- குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு இடங்க ளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றது. மதசார்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிள வுபடுத்தும், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தீவிரப்படுத்தும் வகையில் ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனை உட னடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஈரோட்டில் காளை மாடு சிலை அருகில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத் தின் மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி, மாவட்டச் செயலாளர் வி.ஏ. விஸ்வநாதன், மாவட்ட துணைத் தலைவர் பி.அன்பு ஜனாதிபதி, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பி.நவீன் மற்றும் கோபால கண்ணன், பி.ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தருமபுரி இதேபோன்று, தருமபுரி மாவட்டத்தில், விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில், தருமபுரி தொலை பேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு விசிக மாவட்டச் செய லாளர்கள் த.கு.பாண்டியன், சி.கே.சாக்கன் சர்மா, கா.கருப்பண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார், மண்டலச் செய லாளர் ஜே.கே.தமிழ் அன்வர், மண்டல துணைச்செயலாளர் மின் னல் சக்தி, திமுக மாவட்டப் பொரு ளாளர் தங்கமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகரா சன், காங்கிரஸ் மாவட்டத் தலை வர் தீர்த்தராமன், இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட தலைவர்கள் சுபேதார், சீரஜீன், விசிக நாடாளு மன்ற தொகுதி செயலாளர் கோட்டை கலைவாணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் த.ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.