கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாத காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வெள்ளியன்று, சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, தாலுகாச் செயலாளர் என்.ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.