districts

img

ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தெருமுனைக் கூட்டம்

ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம், அரூர் ரவுண்டானா அருகே வெள்ளியன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கம்பைநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, ஒன்றியச் செயலாளர் பி.ஜெயராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.