districts

img

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

அறந்தாங்கி, நவ.28- இராமநாதபுரம் நாடாளு மன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறந்த பள்ளிகள், சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்கள், சிறந்த தனித்திறன் கொண்ட மாண வர்கள் மற்றும் பள்ளி இதர செயல்பாடுகளில் சிறப்பாக பணியாற்றி வந்தவர்களுக்கு இராமநாதபுரம் கோல்டன் மஹாலில் இராமநாதபுரம் ஆட்சி யர் தலைமையில் தேசிய கல்வி நாள் விழா நடைபெற்றது.  விழாவில் புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் அரசு உயர் நிலைப்பள்ளியின் ஆங்கில ஆசி ரியராக பணிபுரிந்து வரும் மு. அக்பர் அலி யூசுப் கஸ்ஸாலியின் ஆசிரியர் பணியின் சேவையை பாராட்டி ஆட்சியர் கே.வீரராக ராவ் கல்வி ரத்னா விருதும், ஜீனியர் ரெட்கிராஸ் பணியில் இருபத்தி ஐந்து ஆண்டுகள் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி வந்ததற்கு இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் கே. நவாஸ்கனி நம்பிக்கை நட்சத்திர விருதையும் வழங்கி பாராட்டினார்கள். இவ்விருதினை பெற்ற ஆசிரி யர் மு.அக்பர் அலியூ சுப்கஸ் ஸாலி ஜீனியர் ரெட்கிராஸ் அமைப் பின் மாநில பயிற்சி ஆசிரியராக வும், இந்தியன் ரெட்கிராஸ் சொ ஸைட்டியின் மாவட்ட துணை பேட்டனாவும் பணியாற்றி வருகி றார். விருது பெற்ற ஆசிரியரை அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிட செல்வம், பள்ளி துணை ஆய்வாளர் செல் வம், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.மணிமுத்து, ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினார்கள்.