கோவை, செப்.16- அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தின் முன்னாள் மாவட்ட பொருளாளர் மணி வண்ணனின் நினைவாக, மாநில அளவி லான இறகுப்பந்து போட்டி கோவையில் நடைபெற்றது. திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தின் கோவை மாவட்ட முன்னாள் பொருளா ளராக பணியாற்றியவர் தோழர் மணி வண்ணன். இவரின் முதலாமாண்டு நினைவு மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி செப்.16 சனியன்று, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த இறகுப்பந்து போட்டியில் கோவை, திருப்பூர், மதுரை, சென்னை, திருவண்ணா மலை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து 80க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண் டன. இப்போட்டியை அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மூத்த வழக்கறிஞர் மோகன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் என்.ரா மர் தலைமை ஏற்றார். மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.கோபால் சங்கர் வரவேற்றார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கொடியை மாவட்ட கௌரவத்தலைவர் சுந்தரமூர்த்தி ஏற்றினார். தோழர் மணிவண் ணனின் படத்தை எஸ்.மாசேதுங் திறந்து வைத் தார். இறகுப்பந்து போட்டியில் முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 15 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும் மற்றும் நான்காம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங் கப்பட்டன. இந்த பரிசளிப்பு விழாவிற்கு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் பி.ஜோதி குமார் வரவேற்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வாழ்த்துரை யாற்றினார். இதில், சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சிவக்குமார், சங்கத்தின் தலைவர் பி.நந்தகுமார் உள்ளிட்டோர் கலந் துகொண்டனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணிகள் தேர்வு செய்யப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது.