மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி அரசு பள்ளி மாணவர் 3 ஆம் இடம் பிடித்தார் நாமக்கல், மார்ச் 18- மாநில அளவிலான அறி வியல் கண்காட்சி போட்டி யில், குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் 3 ஆம் இடம் பிடித்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநி லைப்பள்ளி மாணவர் மகத்ராஜ். இவர் மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகளில், அறிவியல் கண்காட்சி பிரி வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத் துள்ளார். இவருக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் குணசேக ரன் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த மாண வர் அரசு சார்பில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் பெற்றுள் ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.