districts

img

வேளாண் விஞ்ஞானிகளுக்கு மாநில அளவில் புத்தாக்கப் பயிற்சி

கோவை, நவ.9- கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் விஞ்ஞானிகளுக்கு மாநில அளவிலான 3 நாள் புத்தாக் கப் பயிற்சி செவ்வாயன்று துவங் கியது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விரிவாக்கக் கல்வி இயக்கம், கோயம்புத்தூர்  மற்றும் இந்திய வேளாண்  ஆராய்ச்சிக் கழகம், வேளாண்  தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி  நிறுவனம், ஹைதராபாத் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுச் சேரி வேளாண் அறிவியல் நிலைய  விஞ்ஞானிகளுக்கு 3 நாள் புத் தாக்கப் பயிற்சி செவ்வாயன்று துவங்கியது.  இதனை தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழக துணைவேந்தர் வெ. கீதாலட்சுமி துவக்கி வைத்தார். இதில், பல்கலைக்கழக ஆராய்ச்சி  இயக்குநர் எம்.ரவீந்திரன் பேசு கையில், இந்திய அளவில் ஓராண் டில் 1.84 லட்ச வயல்வெளி சோதனை களும், 12.8 லட்ச முதல்நிலை செயல் விளக்கங்களும், 731 வேளாண்மை அறிவியல் நிலையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அளவில் வேளாண்மை அறிவியல் நிலையம் விவசாயிகளின் தொழில் நுட்ப திறனை வளர்ப்பதில் முக்கிய  பங்காற்றி வருகிறது. மேலும், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட 880  பயிர் ரகங்களையும், ஆயிரத்து  500க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங் களையும் மற்றும் 150 பண்ணைக் கருவிகளையும் விவசாயிகளுக்கு எடுத்து செல்வதில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சிறப்பாக செயல்படுவதாக கூறி னார். முன்னதாக, பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் பி.பொ.முருகன் அனைவரையும் வரவேற்றார். இறுதியாக முனைவர் ந.ஆனந்தராஜா நன்றி கூறினார்.