அமைச்சர்கள் பங்கேற்பு கோவை, செப்.26- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின துவக்க விழாவில், அமைச் சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகி யோர் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டனர். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா வியா ழனன்று (செப்.26) துவங்கியுள்ளது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகி யோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியன சார்பில் நடத்தப்படும் இவ்வி ழாவில், 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, புதிய பயிர் ரகங்கள், மேலாண்மை தொழில்நுட்பங்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் எதிர்ப்பு காரணிகள், அங்கக வேளாண் இடுபொருட்கள், நானோ தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டல் தொழில் நுட்பங்கள், டிஜிட்டல் வேளாண்மை மற்றும் தானியங்கி நீர் பாசன கருவிகள் ஆகியன காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. மேலும், வேளாண் தொழில்நுட்ப கருத்த ரங்குகள், நேரடி பண்ணை செயல் விளக்கங் கள், பண்ணை கருவிகளின் மாதிரி திடல்கள், விவசாய கடன் மற்றும் பயிர் காப்பீடு குறித்த வங்கி அதிகாரிகளின் விளக்க கருத்தரங்கு களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை அமைச்சர்கள் நேரில் பார்வை யிட்டு கேட்டறிந்தனர்.