சேலம், அக்.25- மாநில அளவிலான கைத்தறி கண் காட்சி சேலம் மாநகரில் வெள்ளியன்று (நாளை) முதல் நவ.10 ஆம் தேதியன்று வரை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங் களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்யும் நோக்கத் துடன், ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி (State Level Handloom Expo) சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி தொங் கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் நடைபெற உள்ளது. அதன்படி வெள்ளி யன்று (நாளை) துவங்கும் இக்கண் காட்சி நவ.10 ஆம் தேதியன்று வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் கைதேர்ந்த நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்கள் காட்சிப்படுத்தி அரசு வழங்கும் 30 சதவிகித தள்ளு படியுடன் விற்பனை செய்யப்பட உள் ளது. மேலும், இக்கண்காட்சியில் தமிழ் நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இயங்கி வரும் கைத்தறி நெசவாளர் கூட் டுறவு சங்கங்கள், கைவினை உற்பத்தி யாளர் குழுமங்களில் உற்பத்தி செய் யப்படும் கைத்தறி ஜவுளிகள், கைவி னைப் பொருட்கள் மற்றும் காதிப் பொருட்கள் (வீட்டு உபயோகப் பொருட்கள்) ஆகியவற்றையும் காட்சிப் படுத்தி விற்பனை செய்யப்பட உள் ளன. தற்போது நடைபெறவுள்ள மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியில் சுமார் ரூ.3 கோடி அளவிற்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகி றது. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவ சம். இந்த அரிய வாய்ப்பினை பயன்ப டுத்தி பொதுமக்கள் அனைவரும் கைத் தறித் துணிகள் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்கி பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.