கோவை, ஜூன் 7– இரவும், பகலும், ஊண் உறக்கம் இன்றி பணியாற்றும் மின்வாரிய தொழிலாளர் களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகள் குறித்து உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியு றுத்தி ஆயிரத்திற்கும் மின் ஊழியர்கள் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடி யாக நடத்தி, நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். டிஏ, எஸ்எல்எஸ், வழங்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள, 50 ஆயி ரம் காலிப்பணியிடங்களை தகுதி வாய்ந்த இளைஞர்களை கொண்டு நிரப்பிட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோவை சிவானந்த காலணியில் உள்ள மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கோவை மண்டலத்தில் உள்ள கோவை மாநகர், தெற்கு, வடக்கு, திருப்பூர், பல்லடம், நீலகிரி, உடுமலைபேட்டை, குந்தா, காடம்பாறை உள்ளிட்ட 9 வட்டங் களின் உள்ள ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் தலைவர் கள் பேசுகையில், திமுக தலைமையில் தமி ழக அரசு பதவியேற்று ஓராண்டு காலம் முடி வுற்றது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த வந்தவுடன் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். முதல்வர் அறிவித்த காலக் கெடுவுக்குள் மின் இணைப்பு வழங்கி இந்திய சரித்திரத்தில் எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனையை மின் ஊழியர்கள் செய்து காட்டினர். இரவு பகல் பாராமல், ஊண் உறக்கம் இல்லாமல் உழைப்பை செலுத்திய மின் ஊழியர்களின் கோரிக்கை கள் மட்டும் நிலுவையிலேயே உள்ளது நியா யமா? தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக மின் ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி னர்.