districts

img

சூலூர் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்

கோவை, மே 5-சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனி சாமியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருகூர் சந்தை பகுதியில் ஞாயிறன்று வாக்கு சேகரித்தார். கோவை மாவட்டம், சூலூர்சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக திமுகவின் சார்பில் பொங்கலூர் நா.பழனிசாமி போட்டியிடுகிறார். இவரது வெற்றிக்காக கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட சனியன்று இரவு கோவை வந்தார். ஞாயி றன்று தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண் டார். ஞாயிறன்று காலை இருகூர் வாரச்சந்தை பகுதிக்கு வந்தார். மு.க.ஸ்டாலின் வருகையை அறிந்து இருகூர் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு ஆரத்தி எடுத்தனர். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சந்தைபகுதியில் காய் கறிகள் வாங்க வந்தவர்களிடமும், வியாபாரிகளிட மும், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான இளம்பெண்களும், இளைஞர்களும் அவரு டன் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் பிரச்சார வாகனத்தில் புறப்பட்டு சென்றார். இந்த வாக்கு சேகரிப்பு பயணத்தில் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி உடன் இருந்தார்.முன்னதாக இருகூர் காந்திசிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி தலை மையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் மற்றும் இருகூர் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செங்கொடிகளோடு மு.க.ஸ்டாலினுக்கு வரவேற் பளித்தனர்.