கோவை, பிப்.7- சிறு சத்தம் கேட்டாலே பயந்து ஓடும் சுபாவம் கொண்ட அணில், எந்நேரமும் இளைஞரிடம் ஒட்டி உறவாடுவது ஆச்ச ரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை பாப்பநாயக்கன் பாளை யம் பகுதியை சேர்ந்தவர் ஹரி. ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் அடிபட்ட நிலையில் குட்டி அணில் ஒன்று வந்துள் ளது. காயம்பட்ட இந்த அணிலுக்கு ஹரி வைத்தியம் பார்த்து காயங்கள் குண மாகும் வரை தினமும் உணவளித்து வந்துள்ளார். இதன்பின் துள்ளி குதித்து ஓடும் நிலையில், அருகிலுள்ள மரத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால், அப்போது தனக்கு வைத்தி யம் பார்த்தவரை பிரிய மனமில்லாத அணில், இவரை பின்தொடர்ந்தே வீடு வந்துள்ளது. இதனையடுத்து இவரு டனே இருக்க அணில் பழகிவிட்டது. ஹரி செல்லும் இடங்கள் எல்லாம் அவருடனே அணில் பயணித்து வருகிறது. கடந்த 8 மாத காலமாக ஹரியுடன் அணில் செல்லு மிடங்களில் எல்லாம் சுற்றி வருவதால் அணிலையும், ஹரியையும் பொதுமக் கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து ஹரி கூறுகையில், எங் கள் வீட்டிற்கு அடிபட்ட நிலையில் அணில் வந்தது. அதனை து பராமரித்து வளர்த்து வந்தேன். இப்போது நாள் முழு வதும் என்னுடன் தான் இருந்து வருகி றது. மோட்டார் சைக்கிளில் வெளியே செல்லும்போது கூட என்னுடனே பய ணித்து வருகிறது என்கிறார்.