districts

நாமக்கல்: குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள்

நாமக்கல், மே 24- நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை  வளர்ச்சித் திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறை யுடன் இணைந்து  ஒரு மாத காலத்திற்கு குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தவுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி 110 இன் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை களைக் கண்டறிந்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சி யினை மேம்படுத்த அரசு வழிகாட்டுதலின்படி, மார்ச்  மாதம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் மூலமாக தமி ழகத்திலுள்ள சுமார் 37 லட்சம் 6 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு சிறப்பு வளர்ச்சிக் கண்காணிப்பு இயக்கம் நடத் தப்பட்டது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் 16201 குழந்தைகள் வய திற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது  கண்டறியப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப் பினை முனைந்து செயல்படுத்த முதற்கட்டமாக ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து  ஒரு மாத காலத்திற்கு குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் கள் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தை தொடர்பு கொண்டு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விபரத்தினை அறிந்துகொண்டு, வருங் கால  சந்ததியினர்களை வளமானவர்களாக மாற்ற ஒத்து ழைக்க வேண்டும். செவ்வாயன்று முதல்  1 மாத காலத் திற்கு நடைபெறும் இந்த சிறப்பு மருத்துவ முகாமிற்கு தங்கள் குழந்தைகளுடன் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.