districts

img

டெங்கு பாதிப்பு எதிரொலி: நெசவாளர் காலனி மாநகராட்சி பள்ளியில் சிறப்பு காய்ச்சல் முகாம்

திருப்பூர், நவ. 25 - திருப்பூர் நெசவாளர் காலனி மாநகராட்சி பள்ளியில் 4ஆம்  வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி டெங்கு காய்ச்சல் பாதிக் கப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில்  அப்பள்ளியில் வெள்ளியன்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடத் தப்பட்டது.  திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரைச் சேர்ந்த பாண்டியன்  என்பவரது மகள் அழகு மீனாட்சி டெங்கு காய்ச்சலில் பாதிக் கப்பட்டது ரத்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் திருமங்கலம் சென்று  மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத் தைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை சார் பில், பள்ளியில் சிறப்பு காய்ச்சல் முகாம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. மாநகர் நல அலுவலர் கெளரி சரவணன் தலை மையில் இம்முகாம் நடத்தப்பட்டது. சுகாதாரத்துறை ஊழி யர்கள் பள்ளி வளாகத்தில் கொசு மருந்து அடித்தும், கழிப்ப றைகளையும் சுத்தம் செய்தனர். அங்கு பயிலும் மாணவர் களுக்கு நில வேம்பு கசாயம், காய்ச்சல் தடுப்பு மாத்திரை கள் உள்ளிட்டவற்றை வழங்கப்பட்டது.