உதகை, ஜன.8- உதகை, மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு தூய்மை முகாம் கடைபிடிக்கப்பட் டது. “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற திட்டத்தின் கீழ், ஜனவரி 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை, தமிழகமெங்கும் சிறப்பு சுத்திகரிப்பு முகாமை நடத்த அனைத்து பள்ளிகளிக்கும், பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்த லின்படி, உதகை மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நுழைவுவாயிலில் இருந்த புதர்களை அகற்றும் பணி, பள்ளி தலைமை ஆசிரியர் பால் விக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசி ரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வா கிகள், தேசிய பசுமை படை, இளம் செஞ்சி லுவை சங்கத்தை சேர்ந்த மாணவர்கள், பெற் றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.