திருப்பூர் மார்ச் 20 - திருப்பூர் கொங்குமெயின் ரோடு ரங் கநாதபுரம் 5ஆவது வீதியில் உள்ள அமுதா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி யில் விண்வெளி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 60 ஆண்டு காலமாக விண்வெளி ஆய்வில் தடம் பதித்து வரும் நமது நாட் டின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனத்தை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய வானியல் அறிவியல் கண் காட்சி 2023 எனும் மைய கருத்துடன் ஞாயிறன்று பள்ளி வளாகத்தில் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 15 ஆண்டுகளாக நடைபெறும் அறி வியல் கண்காட்சியை திருப்பூர் ஜாய் ஆலுக்காஸ் நிறுவன மேலாளர் அனீஸ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, மாணவ மாணவிகளின் விண்வெளி அறிவியல் படைப்புகளை பார்வையிட் டார். மாணவர்கள் தங்களின் சொந்த முயற்சியில் வடிவமைத்த 50 வகையான அறிவியல் படைப்புகளை காட்சிப்ப டுத்தி வைத்திருந்தனர். அறிவியல் படைப்புகள்:- இஸ்ரோவின் எழுச்சி, விண்வெளி அறிவியலில் தடம் பதித்த இந்தியாவின் பி. எஸ்.எல்.வி ராக்கெட், சந்திராயன், மங்கள்யான் உள்ளிட்ட விண்கலத்தின் மாதிரிகள், விண்வெளி பற்றி புரிதலை ஏற்படுத்தும் வகையான சூரிய குடும் பம், பூமி சுற்றுதல், நிலவின் கட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை உள் ளடக்கிய புவி நிலைச் செயற்கைக் கோள், ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி என இடம் பெற்றிருந்த அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விண்வெளி வீரர் கள் மாதிரி உருவப்படங்களில் தங்க ளின் முகத்தை ஒப்பிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த படைப்புகளை 4ஆம் மற்றும் 5ஆம்வகுப்பு மாணவ, மாணவிகள் இணைந்து செய்திருந்தது பிரம்பிப்பை ஏற்படுத்தியது. இந்த விண்வெளி அறி வியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாக பொறுப்பாளர் ராணி ராம மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.