districts

img

பதற்றமான வாக்குச்சாவடிகளில் எஸ்பி ஆய்வு

நாமக்கல், மார்ச் 27- குமாரபாளையத்தில் பதற்றமா னவை என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்  கண்ணன் நேரில் ஆய்வு மேற்கொண் டார். ஈரோடு மக்களவை தொகுதிக் குட்பட்ட, நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகு தியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சி களை கொண்ட குமாரபாளையம் சட் டமன்ற தொகுதியில், மக்களவை தேர்தல் பணிகளை அனைத்து அர சியல் கட்சியினர் செய்து வருகின்ற னர். அதேபோல், தேர்தல் தொடர் பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், வாக்களிக்க அத்தாட்சி சீட்டு வழங்குவதற்கான பணிகளில் அரசு அதிகாரிகளும் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், குமாரபாளையம் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட 279 வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு வசதி குறித்து நாமக்கல் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ராஜேஷ் கண் ணன் நேரில் ஆய்வு மேற்கொண் டார். மேலும், மக்கள் நடமாட்டம்  அதிகம் உள்ள மற்றும் பதற்றமா னவை என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற் கொண்டு, போதுமான பாதுகாப்பு  பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளதா? என தெரிந்து கொண்டார். இந்நி கழ்வில், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், உதவி  ஆய்வாளர் கெங்காதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.