districts

img

மண் பாண்டங்கள் தயாரிக்க மண் கிடைப்பதில்லை மண் பாண்டத் தொழிலாளர்கள் வேதனை

கோவை, ஏப். 27- மண் பானைகள் தயாரிப்புக்கு மண் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், மண் பானை தொழில் நலிவடைந்து வருவதாக மண்பானை தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.  இது குறித்து கோவை மேட்டுப்பாளை யம் சாலையில் மண் பானை விற்பனையில் ஈடுபடுபவர்கள் கூறியதாவது:- முன்பை விட  மண் பாண்டங்களுக்கு மக்களிடையே வர வேற்பு அதிகரித்து உள்ளது. கோடை வெயி லின் வெப்பம் அதிகரித்து உள்ளதால், மண் பானைகளை வாங்க அதிக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மண்ணால் செய்த பானைகளின் முக்கி யத்துவம், பயன்கள் அதிகம் இருப்பதால் மண் பானைகள் விற்பனை அதிகரித்து உள்ளது. ஆனால் அதனை உற்பத்தி செய்ய  போதுமான மண் கிடைப்பதில்லை. எனவே,  மண் பாண்டங்கள் செய்ய போதுமான மண்  கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த காலங்களில் போது மான மண் கிடைத்து வந்த நிலையில், தற்போது மண் தட்டுப்பாடு அதிகரித்து விட்டது. இதனால் மண் பாண்டங்கள் செய் யும் தொழில் நலிவடைந்து உள்ளது.  மண் எடுக்க அனுமதி இருந்தும், பானை கள் தயாரிக்க மண் அள்ள முடியாத நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், மண் பானைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும் மண் பாண்டங்கள் உற்பத்தி செய்ய  முடியாத சூழல் ஏற்படும். வரும் காலங்க ளில் மண் பாண்டங்கள் தயாரிக்க எங்க ளுக்கு போதுமான மண் கிடைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி வித்தனர்.