ஈரோடு, ஆக.25- தமிழக அரசு அறிவித்த சிறுதானிய உற் பத்தியை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாதாந்திர வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா மற்றும் வேளாண்துறை உள்ளிட்ட அரசு அலுவலர் களும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவ சாயிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம். முனுசாமி பேசியதாவது, சக்தி சர்க்கரை ஆலை மற்றும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை ஆகியவற்றிற்கு விவசாயிகள் கரும் பினை வழங்கி வருகின்றனர். கரும்பு வெட்டுக்கூலியாக டன் ஒன்றுக்கு ரூ.1000த் திற்கு மேல் ஆகிறது. வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்யாமல் ஆலை நிர்வாகங் களே தீர்மானிக்கிறது. இந்நிலையில், ஆலை நிர்வாகம், கரும்பு வெட்டும் தொழிலாளர் கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆகி யோரைக் கொண்ட முத்தரப்பு கூட்டத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட் டினார். அதில் ஆட்கள் வெட்டும் கூலிக்கும், இயந்திரங்கள் வெட்டும் கூலியும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் நமது மாவட் டத்திலும் முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்ய வேண் டும். கால்நடைகளின் விலை, தவுடு, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, வைக்கோல் உள் ளிட்ட தீவனங்கள் விலை உயர்ந்துள்ளன. இந்நிலையில் தற்போது ஆவினில் வழங்கி வரும் பால் கொள்முதல் விலை கட்டுப்படி யாகவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒரு லிட்டருக்கு ரூ.1 வீதம் ஊக்கத்தொகை வழங் கப்படும் என அறிவித்தது. இதனை உடனடி யாக வழங்க வேண்டும். மேலும், ஆரம்ப சங் கங்களிலிருந்து பாலை எடுக்கும்போது வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக அள வையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். மேலும், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க சாமை, திணை, வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்தியை அதிகப்படுத்த விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும். ஈரோடு, வ.ஊ.சி.பூங்காவில் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், விவசாயிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளிடம் தகாத வார்த்தைகள் பேசுவதும், பணம் வசூலிப் பதும், தகராறும் ஏற்படுகிறது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்சனைகளை களைய வேண்டும் என் றார்.