திருப்பூர், ஜூன் 11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் வடக்கு மாநகரக்குழு சார்பில் கட்சி இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஞாயிறன்று கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கட்சியின் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் பா.சௌந்தரராசன் தலைமை வகித்தார். செய்திகளில் உண்மை யான, நேர்மையான விசயங்களைக் கண்டறிவது குறித்து ஆசிரியர் எஸ்.எஸ்.விஜயகுமார் உரையாற் றினார். மார்க்சிய கண்ணோட் டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அரங்க நடவடிக்கைகள் பற்றியும், இளைஞர்களுக்கு தேவை யான அரசியல் எது என்பது பற்றியும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் உரையாற்றி னார். பிற்பகல் அமர்வில், பிரச்சனை களை கண்டுபிடிப்பது, அதை போராட்டமாக மாற்றுவது மற்றும் புதிய முழக்கங்களை உருவாக் குவது குறித்து சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் விளக்கிக் கூறினார். இதில் தேர்வு செய்யப் பட்ட இளம் ஊழியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இம்முகாமில் கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர்கள் துரை.சம்பத், பொன்.பாலகுமாரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல் பட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் பி.ஆர். கணேசன், மாவட்டக்குழு உறுப் பினர் ஆர்.மைதிலி, மாநகரக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற் றனர்.