districts

img

வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

நாமக்கல், பிப்.12- எருமபட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போதை பொருட்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார் பில், தமிழ்நாடு முழுவ தும், போதையற்ற தமிழ் நாட்டினை உருவாக்கிட வலியுறுத்தி, பொதுமக் களை சந்தித்து ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், கையெழுத்து இயக்கமானது ஞாயிறன்று நடைபெற்றது. இந்நி கழ்ச்சிக்கு, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், சங்கத் தின் மாவட்ட பொருளாளர் எஸ்.கே. சிவசந்திரன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாதர் சங்க நிர்வாகி எஸ்.மாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை வஉசி மைதானத்தில் துவங்கிய கையெழுத்து இயக்கத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.  இதில், கோவை மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் பதாகையில் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன்,  வாலிபர் மாவட்ட செய லாளர் அர்ஜுன், பொருளாளர் தினேஷ் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அசாருதீன், மாநில செயற் குழு உறுப்பினர் கயல்விழி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  இதேபோன்று, சிங்கை, கோவை கிழக்கு, அன்னூர், எஸ்எஸ்.குளம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வாலிபர் சங் கத்தின் போதைக்கு எதிரான கையெ ழுத்து இயக்கத்தை பொதுமக்கள் வர வேற்று ஆர்வத்தோடு கையெழுத்திட் டனர். இதில், சனோஜ் மணிபாரதி  தியாகு, நிஷார் அகமத், முத்து முருகன், மனோஜ், சுரேஷ் குமார், சிவசங்கரன்,  ந.ராஜா, பி.மைதிலி, ஒ.அ.ஜோஷ்வா உள்ளிட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.