districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவை: ரேசன் அரிசி பறிமுதல்

கோவை, மார்ச் 6- பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் ஆய்வாளர் விவேகானந்தன் உள்ளிட்ட காவல் துறையினர், உக்கடம்  பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது கோட்டைபுதூர், ஜமீன்தார் நகரில் உள்ள ஒரு செட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி வேனில் 50 மூட்டைகளில் 2¼ டன் ரேசன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இடத்தின் உரிமையாளர் ஜபருல்லா மற்றும் நிஜாமுதீன் ஆகிய 2 பேர்  மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை

ஈரோடு, மார்ச் 6- அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளதாக பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். ஈரோடு மாநகரம், பன்னீர்செல்வம் பூங்கா அருகில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இவ்வளா கத்தில் ஆரம்பப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இங்கு  சுமார் 500 மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வி பயின்று வரு கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தற்போது மாற்றுப்பணி மூலம் 5 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர். 8 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தேவையான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் ஆரம்ப கல்விக்கான எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 150 வருட பாரம்பரியம் மிக்க இப்பள்ளிக்கு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அர சுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மின்தடை

நாமக்கல், மார்ச் 6- நாமக்கல், பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளது. எனவே, செவ்வாயன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வையப்ப மலை, கருங்கல்பட்டி, மொரங் கம் நாகர்பாளையம், மின் னாம்பள்ளி, குப்பிச்சிபாளை யம், சின்னமணலி, நல்லாம் பாளையம், கட்டிப்பாளை யம், சோமனம்பட்டி, பருத்திப் பள்ளி, ராமாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என தெரி விக்கப்பட்டுள்ளது.

33 ஆயிரம் மர நாற்றுகள் உற்பத்தி

மேட்டுப்பாளையம், மார்ச் 6- சிறுமுகை வனப்பகுதியில் நடவு செய்ய 33 ஆயிரம் மர  நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியாக கருதப்படும் சிறுமுகை வனச்சர கம் 11 ஆயிரத்து 684 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இவ் வனப்பகுதியில் ஏராளமான காட்டு மரங்கள் உள்ள போதிலும், இயற்கையான காரணங்களினால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விடும் போது, இதனை சமன் செய்யும் வகையிலும்,  அங்கு வாழும் வன உயிரினங்களுக்கு தீவனமாக பயன் தரும் வகையிலும் புதிய மர நாற்றுக்களை மழைக்காலங்களில் காட் டினுள் நடவு செய்ய வனத்துறை நடவடிக்கை எடுத்து வரு கிறது. இதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அரசு மரக்கிடங்கு எதிரே உள்ள வனத் துறை நாற்றாங்கால் பண்ணையில் மர நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. உசில், மூங்கில், இலந்தை, கொடுக்காப்புளி என காட்டினுள் இயல்பாக வளரும் தன்மையுடைய 33 ஆயிரம் மர நாற்றுக் கள் நபார்ட் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு வரு கிறது. இவை சுமார் மூன்றடி உயரம் தாண்டி நன்கு வளர்ந்த பின் வனத்தினுள் நடவு செய்யப்படவுள்ளது. காட்டினுள் வளர்க்க 33 ஆயிரம் மரக்கன்றுகள் தவிர விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தமிழக உயிர் பன்மை மற்றும் பசுமை யாக்க திட்டத்தின் கீழ் தேக்கு, மகாகனி, மலை வேம்பு, சவுக்கு என தனியாக 6 ஆயிரம் மரக்கன்றுகளும் வனத்துறையின ரால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மரத்தில் கார் மோதியதில் பெண் பலி

பள்ளிபாளையம், மார்ச் 6- பள்ளிபாளையம் அருகே மரத்தில் கார் மோதி விபத்துக் குள்ளானதில், பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். ஈரோடு மாவட்டம், சங்கு நகரைச் சேர்ந்த ஜாபர் அலி (45). அவருடைய மனைவி பர்கத் நிஷா (40). இவர்களுக்கு முக மது ஷகீம், ஆசிக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந் நிலையில், சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக ஈரோடு செல்வ தற்காக, சனியன்று மாலை காரில் பள்ளிபாளையம் வந்து  கொண்டிருந்தனர். அப்பொழுது கருக்கன்காடு என்ற பகுதி யில், எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற இருசக்கர வாக னம் மீது, கார் மோதி ்கட்டுபாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில், காரின் முன்  பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பர்கத் நிஷா உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளிபாளையம் அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சைக்காகவும், பிறகு ஈரோடு மருத் துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த னர். இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் காவல் துறை யினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர்

திரிபுராவில் தேர்தலுக்குப் பின்  சிபிஎம் ஊழியர்கள், கட்சி அலுவலகங்கள்  மீது பாஜகவின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நாள்: 07.03.2023, செவ்வாய்கிழமை நேரம்: மாலை 5.30 மணி இடம்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு

 வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி

அவிநாசி, மார்ச் 6 - குன்னத்தூர் அருகே  அடையாளம் தெரியாத  வாகனம் மோதி விபத்துக் குள்ளானதில், நடந்து சென்ற வர் ஞாயிறன்று உயிரிழந் தார். குன்னத்தூர், சின்னயக வுண்டன்வலசு பகுதியைச்  சேர்ந்தவர் வெங்கடாச் சலம் (52). இவர் ஞாயிறன்று காலை ஆதியூர் - குன்னத் தூர் சாலையில் நடைப்  பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரி யாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதில், பலத்த காயமடைந்த வெங் கடாசலம் சம்பவயிடத்தி லேயே உயிரிழந்தார். இது  குறித்து குன்னத்தூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து  விசாரிக்கின்றனர்.

இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை:  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி

திருப்பூர், மார்ச். 6 -  வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப் பவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நடவ டிக்கை எடுக்கப்படும் என திருப்பூரில் செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதை தடுப்பு மற்றும் வட மாநில தொழிலாளர் பிரச்சனை குறித்த  ஆய்வுக்கு பின்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமி நாதன் கூறியதாவது: வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்தும் இக்கூட் டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பீகார், ஜார்கண்ட் உயர்மட்ட  அதிகாரிகள் குழு திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்துள் ளது. வட மாநிலத்துக்கு சென்றுள்ளவர்கள் பண்டிகைக்காக  சென்றுள்ளனரே தவிர, அச்சுறுத்தல் காரணமாக யாரும்  செல் லவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்புவர் கள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். வட மாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள் ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:36.50/60அடி நீர்வரத்து:798கன அடி
வெளியேற்றம்:1174கனஅடி

அமராவதி அணை நீர்மட்டம்:53.48/90அடி.நீர்வரத்து:32கனஅடி
வெளியேற்றம்:131கனஅடி