உடுமலை, டிச.29- பாதாள சாக்கடை குழாய்கள் உடைத்து ரோடுகளில் பள்ளம் ஏற்படுவதால் வாகனங்கள் விபத்துக்குளாகிறது. உடுமலை நகாரட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நகர் பகுதியில் சுமார் 97 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.56.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரோடுகளில் சாக்கடை குழாய் மற்றும் மேனல்கள் அமைக்க ரூ.39.46 கோடியும், பின்னர் சாலைகள் அமைக்க ரூ.17 கோடியும், பின்னர் அதன் கழிவு நீரை நகரின் எல்லை பகுதியான ஏரிப்பாளையத்தில் சுத்திகரிக்க சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் வேலையும் நடைமுறைப்படுத்தபட்டது. இந்நிலையில், பாதாள சாக்கடை வேலைகள் முறையாக நடைபெறாமல் போனதால் தினமும் குழாய்கள் மற்றும் மேனல்கள் உடைந்து வருகிறது. இதனால் நகரில் உள்ள அனைத்து ரோடுகளும் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், சாக்கடை நீர் ரோடுகளில் செல்வதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சாலைகளில் வேகத்தடை போல் உள்ள இந்த பாதாள சாக்கடை குழாய் உடைப்புகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.