திருப்பூர், மே 12- திருப்பூரில் முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக் காததால் குடியிருப்பு பகுதி களுக்குள் கழிவுநீர் செல்வ தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். திருப்பூர் மாநகராட் சிக்கு உட்பட்ட 45ஆவது வார்டு சுகுமார் நகர் பகுதி யில் 500க்கும் மேற்பட்ட வீடு கள் உள்ளன. இந்த குடியி ருப்பில் இரண்டாயிரத்துக் ்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த சூழ் நிலையில் கடந்த சில தினங் களாக மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சாக் கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்து செல்ல வழியில்லா மல் சாலைகளில் ஓடுகின் றன. அதன் ஒரு பகுதியாக சுகுமார் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் முறை யாக அமைக்கப்படாததன் காரணமாக கழிவுநீர் வீடு களுக்குச் சென்று துர்நாற் றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடன டியாக மாநகராட்சி நிர்வாகம் இந்த குடியிருப்புப் பகுதி யில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.