districts

img

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு மற்றும் ஒவ்வொரு வீட்டு வரிக் கும் தனித்தனி பாதாள சாக்கடை கட்டணம் வசூல் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், குப்பை வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திங்க ளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்நிலையில், செவ்வாயன்று மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், வேலம் பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் மற்றும் வடக்கு மாநகரச்  செயலாளர் பா.சௌந்தரராசன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை களை வலியுறுத்தினர். வரிக்குறைப்பு தொடர்பாக மாநில அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக மேயர் ந. தினேஷ்குமார் பதில் அளித்தார். துணை மேயர் ஆர்.பாலசுபிரமணியம் உடனிருந்தார்.