திருப்பூர், மே 9- திருப்பூர், பட்டுக்கோட்டையார் நக ரில் குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார் பில் மனுக் கொடுக்கும் இயக்கம் நடத் தப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி, 55 ஆவது வார்டுக்குட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் 1 முதல் 8 வீதிகள், மேற்கு, கிழக்கு காம்பவுண்ட் பகுதிகளில் 600க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதி மக்களுக்கு 15 நாட்க ளுக்கு ஒரு முறை மட்டும் சீரற்ற முறை யில் குடிநீர் கிடைக்கிறது. 5 முதல் 8 வீதி களுக்கு உப்புநீர் குழாய் போடப்பட வில்லை. சாலைகள் குண்டும், குழியு மாக உள்ளது. சாக்கடை சுத்தம் செய்ய முறையாக ஆட்கள் வருவதில்லை. எனவே, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும், சாலை கள் செப்பனிட வேண்டும், உப்பு நீர் சீராக வழங்க வேண்டும். சாக்கடை முறையாக தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து வீதிகளிலும் வீடு களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமாரிடம் மனு அளித்தனர். இதில் சங்கத் தலைவர் என்.சேகர், செயலாளர் சு.சுந்தரம், பொருளாளர் கு.ந.தங்கராசு, மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் ஆறுக் குட்டி உள்பட இப்பகுதி பெண்கள் திர ளானோர் இதில் கலந்து கொண்டனர். இவர்களது மனுவை பெற்றுக் கொண்ட மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வும், மற்ற கோரிக்கைகளை விரைவில் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித் தார்.