கோவை, நவ.16- தொடர்ச்சியாக காய்ச்சல் இருந் தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும் என கோவை அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். பருவ மழை காரணமாக வரும் காய்ச்சல் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதல் வர் நிர்மலா வியாழனன்று செய் தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆங்காங்கே பெய்து வருகி றது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பருவ காலத்தில் காய்ச்சல் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. இதனை கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஏற்கனவே வைக்கப்பட் டுள்ளது. இது போன்ற சமயங்க ளில் மருத்துவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளளோம். கோவை அரசு மருத்துவமனை யில் அதிகமான காய்ச்சல் நோயா ளிகள் வருவதாக கூற முடிய வில்லை. நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கோவை அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர் கள் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழைநீர் தேங்காமல் இருக்க அரசு அறிவுறுத்தியதை பொதுமக்கள் மேற்கொள்ள வேண் டும். எப்போதும் கொதிக்கவைத்த நீரையே பருக வேண்டும் என் றார். முன்னதாக, உலக நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் தினத்தில் அவர் பேசுகையில், நாள் பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அனுசரிக் கப்படுகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இந்நோய் ஏற்படுகி றது. புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் இந்த நாளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகி றது. கோவை அரசு மருத்துவ மனை நுரையீரல் பிரிவில், நாளொன்றுக்கு சுமாா் 5 முதல் 10 பேருக்கு இந்நோய் இருப்பது புதி தாக கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை தொடங்கப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கு 15 முதல் 20 போ் இந்நோய்க்கு இப்பிரிவில் தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.