திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் இரண்டாவது பட்டமளிப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) முனைவர். ரூபா குணசீலன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.