திருப்பூர், டிச.4- தையல் தொழிலாளர்கள் நல வாரியத் திற்கு முத்தரப்பு குழு அமைத்திட வலியுறுத்தி சிஐடியு தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் உடுமலையில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு முத்தரப்பு குழு அமைத்திட வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கட்டுமானம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வழங்குவது போலப் பணப் பலன்களை உயர்த்தி வழங்க வேண் டும். நோய்களிலிருந்து தையல் தொழிலாளர் களை பாதுகாத்திட நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தையல் தொழிலாளர்களுக்கு பிஎப் இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். 55 வயதில் பெண்களுக்கு ஓய்வூதி யம் வழங்கிட வேண்டும். 60 வயது நிறைவ டைந்த நாள் முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலதாமதம் ஆனாலும் நிலு வைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண் டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் பி.ரத்தினசாமி தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டத் தலைவர் எஸ்.வேல்முருகன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்டத் துணைச் செய லாளர் எஸ்.ஜெகதீசன், மாவட்ட குழு நிர்வாகி எல்லம்மாள், கட்டுமான சங்கத்தின் தலை வர் கே.கனகராஜ், போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தலைவர் விஸ்வ நாதன், தையல் சங்கத் தலைவர் ராஜா, நிஷா பானு, உட்பட பலர் பங்கேற்ற்னர்.