நாமக்கல், மார்ச் 23- திருச்செங்கோடு நகராட்சியில் வாடகை நிலுவைத் தொகை வைத்திருந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு நகராட்சி ஆணையாளர் தலைமையில் சீல் வைக்கப்பட் டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்கு சொந்தமாக 282 கடைகள் உள்ளன. இந்த கடைகள் சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவிற்கு வாடகை நிலுவைத் தொகையை வைத்துள்ளது. இதில் அதிக காலமாக தவணைத் தொகை செலுத்தாத பத்துக்கும் மேற்பட்ட கடைகளை திருச்செங்கோடு நகராட்சி பொறுப்பு ஆணையர் சண்முகம் பூட்டி சீல் வைத்தார். அதேநேரம், கொரோனா காலகட்டத்தில் கடை திறக்காத நாட்களுக்கும் சேர்த்து நகராட்சி நிர்வாகம் வாடகை தொகையை வசூல் செய்கிறது. ஆனால், கொரோனா கால கட்டத்தில் வியாபாரம் முழுமையாக இல்லை. ஆகவே, அந்த தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கடையை ஒப்பந்தம் எடுத்தவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.