districts

img

விடைபெறுகிறது தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம்

இன்றைய டிஜிட்டல் கால கட்டத்தில் திரை படங் களையும், தொலைக் காட்சி தொடர்களையும் எடுக்க சென்னையிலும், அவுட்டோர் ஷூட் டிங்குகள் வெளியூர்களிலும் எடுக்கப் படுகின்றன. ஆனால், இந்தியாவில் சினிமா நுழைந்த ஆரம்ப காலத்தில், தென்னிந்தியாவில் முதன்முதலில் கோவையில் தான் ஸ்டுடியோக்க ளும், சினிமா தியேட்டர்களும் உரு வாக்கப்பட்டன. அப்படி தென்னிந் தியாவில் முதன் முதலாக உருவாக் கப்பட்ட சினிமா தியேட்டர் தான்  வெரைட்டி ஹால் என்றழைக்கப்பட்ட டிலைட் திரையரங்கம். கடந்த 1914 ஆம் அண்டு இந்த திரையரங்கம் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவ ரால் கட்டப்பட்டு முதன் முதலில் வள்ளித்திருமணம் படம் திரையிடப் பட்டது.  இதுதான் தென்னிந்தியாவில் கட் டப்பட்ட நிரந்தரமான முதல் திரைய ரங்கம் ஆகும். இன்றளவும் இந்த திரை யரங்கம் அமைந்துள்ள சாலை வெரைட்டி ஹால் சாலை என்று அழைக்கப்படுகிறது. அந்த கால கட்டத்தில் கோவையில் மின்சாரம் இல்லாத நிலையில் மக்கள் மண் ணெண்ணெய் விளக்குகளைத்தான் பயன்படுத்தி வந்தனர்.

அப்போது, கோவையில் செயல்பட்ட முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளுக்கு மட்டும் உதகை அருகே உள்ள பைக்காரா நீர்தேக்கத் தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கி வந்தது.  அப்போது வின்சன்ட் சாமிக்கண்ணு வெளிநாட்டில் இருந்து ஒரு ஆயில் இஞ்சினை தருவித்து அதன் மூலம்  மின்சாரத்தை உற்பத்தி செய்து திரை யரங்கை இயக்கினார். அந்த மின்சா ரத்தை கொண்டு திரையரங்கம் இருந்த  வெரைட்டி ஹால் சாலை முழுவதும் மின்விளக்குகளால் ஒளிரச் செய்தார். பிரிட்டிஷ் இந்தியாவின் ரயில்வே துறையில் வரைகலை நிபுணராக பணி யாற்றி வந்த வின்சன்ட் சாமி கண்ணு. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனது நண்பர் சொந்த ஊருக்கு செல்ல பண உதவி செய்துள்ளார். அதற்கு கைமா றாக அவர் தன்னிடம் இருந்த பிலிம் ப்ரொஜெக்டர் கருவியுடன் சில படச் சுருள்களையும் கொடுத்துவிட்டு சென் றார். ஆரம்ப காலகட்டத்தில் அந்த ஃபிலிம் ப்ரொஜெக்டர் மூலம் பொது மக்கள் கூடும் இடங்களில் திரை கட்டி  படங்களை திரையிட்டு வந்தார். இதில் நல்ல வருவாய் கிடைக்க கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள சாலையில் நிரந்தர திரையரங்கை கட்டினார். இப்படித்தான் கோவைக்கு முதல் நிரந்தர திரையரங்கம் வந்தது. 1950 ஆம் ஆண்டு இந்தத் திரையரங்கம் வேறொரு நபருக்கு விற்கப்பட்ட நிலை யில் வெரைட்டி ஹால் என்ற பெயர் டிலைட் என மாற்றம் செய்யப்பட்டது.  எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன்,  ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் என திரை ஜாம்பவான்களின் தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்கள் டிலைட் திரையரங் கில் வெளியிடப்பட்டு வெற்றி விழா  கொண்டாடப்பட்டன. கோவையின் அடையாளங்களில் ஒன்றான இந்த திரையரங்கம் ஒரு நுாற்றாண்டை கடந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.  தமிழகத்தில், ஒரு நுாற்றாண்டு காலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த திரையரங்குகள், டிஜிட் டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியா லும் நவீன வசதிகளாலும் இன்றைய  மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுடன் போட்டியிட முடியாமல்  திருமண மண் டபங்களாகவும், வணிக வளாகங்களா கவும் மாற்றம் கண்டுவிட்ட நிலையில், டிலைட் திரையரங்கமும் இதிலிருந்து தப்பவில்லை.

இங்கு பழைய படங்கள்  மட்டுமே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் படங்கள் திரையிடுவது நிறுத் தப்பட்டது. பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக காட்சிகள் ரத்து செய் யப்படுவதாக திரையரங்க நிர்வாகம் கூறிவந்த நிலையில் தற்போது வணிக வளாகம் கட்டுவதற்காக திரைய ரங்கை இடிக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.  இது குறித்து வெரைட்டி ஹால்  திரையரங்கின் அருகே கடை வைத்து  நடத்தி வரும் கண்ணன் என்பவர் கூறும் போது, வரலாற்று பொக்கிஷமான டிலைட் திரையரங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் நூற் றாண்டு விழாவை கொண்டாடியது. பாபி என்ற இந்தி படம் எப்போது இங்கு திரையிட்டாலும் 50 நாட்களைக் கடந்து ஓடும். ரஜினி, கமல் உள்ளிட்ட நட்சத்தி ரங்களின் திரைப்படங்கள் இங்கு 100 நாட்களைக் கடந்து ஓடி இருக்கின் றன. ஞாயிற்றுக்கிழமை தினங்களில் எப்போதும் அரங்கு முழுவதும் நிறைந் திருக்கும். தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கம் என பெயர் பெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டி டம் இப்போது எலும்பு கூடாக காட்சி யளிக்கிறது. இனி இந்தக் கட்டிடம் மக்கள் பார்வைக்கு இல்லாமல் விடை பெறுவதுடன் வணிக வளாகமாக மாறு வது வருத்தம் அளிக்கிறது, என்றார்.  -கார்த்திக் மதிவாணன்