districts

img

பள்ளி மாணவர்கள் சாலையில் உருண்டு போராட்டம்


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் சாலையில் படுத்து உருண்டு போராடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோடாங்கிபட்டி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் வெளியூர் சென்று படிக்கும் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அச்சாலையில் பள்ளி மாணவர்கள் படுத்து, உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெண்கள் உட்பட கிராமவாசிகள் 100க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.