districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

யானை தாக்கி ஒருவர் பலி

உதகை, அக்.15- கோத்தகிரி அருகே, கீழ் கூப்பு பகுதியில் காட்டு யானை தாக்கி பழங்குடியின கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வனச்சரகத்திற்குட்பட்ட குஞ்சபனை வனப்பகுதியில், கீழ் கூப்பு பழங்குடியின கிராமம்  உள்ளது. இங்கு அடிக்கடி காட்டு யானைகள் வருவது வழக் கம். இந்நிலையில், செம்மனாரை பகுதியை சேர்ந்த சண் முகம் (38) என்பவர், திங்களன்று இரவு வீடு திரும்பாததால், செவ்வாயன்று காலை உறவினர்கள் தேடிச்சென்றுள்ளனர். அப்போது, சண்முகம் படுகாயமடைந்த நிலையில் வனப் பகுதியில் கிடந்துள்ளார். அருகே சென்று பார்த்தபோது, அவர் யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத்தொ டர்ந்து, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சரக்கு வாகனத்தில் பள்ளி குழந்தைகள் பயணம்

ஈரோடு, அக்.15- ஆபத்து ஏற்படும் வகையில், சரக்கு வாகனத்தில் பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சுடர் அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித் துள்ளதாவது, ஈரோடு மாவட்டம், தூக்கநாய்க்கன்பாளையம் ஒன்றியம், கொங்கர்பாளையம் ஊராட்சியில் செயல் படும்  உயர்நிலைப்பள்ளியில், விளாங்கோம்பை கிராமத்திலிருந்து 24 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பகுதி வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதி யாகும். இங்கிருந்து சுமார் 12 கி.மீ மாணவர்கள் பயணிக்கின்ற னர். இந்நிலையில், குழந்தைகள் பள்ளி செல்ல ஏதுவாக பள்ளி கல்வித்துறை வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால்  அது சரக்கு வாகனமாகும். இந்த வாகனத்தில் பள்ளிக் குழந் தைகள் அழைத்துச் செல்லப்படுவது ஆபத்தை ஏற்படுத் தும். எனவே, மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.  தற்போது செல்லும் வாகனத்திற்கும் வாடகை தராததால், அந்த வாகனமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே,  மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்ல வில்லை. எனவே, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்புடன் பய ணிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்  ‘புரளி’ என தெரிய வந்தததால் நிம்மதி

 உதகை, அக்.15-  உதகையில், பிரபல தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட் டது. காவல்துறையின் சோதனையில் வழக் கம்போல் புரளி என்று தெரிந்ததால் நிம்மதி ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ச் சியாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட் டல் விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திங்க ளன்று உதகையில் உள்ள ஜெம்பார்க், அக் கார்ட், உட்லண்ட்ஸ், சிங்க்லர்ஸ் ஆகிய 4  பிரபல தனியார் ஓட்டல்கள் மற்றும் குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், காவல்துறை பல  இடங்களுக்கும் சென்று சோதனை செய்து  அலைக்கழிக்கப்பட்டனர். இறுதியில் புரளி என்று வந்ததால் மன நிம்மதியுடன் வந்த னர்.  இந்நிலையில், தற்போது செவ்வா யன்று உதகையில் உள்ள பிரபல பள்ளிக்கு மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மின்னஞ் சலால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத் தினர் இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.  அதன் பேரில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் காவல் துறையினர் அந்த தனியார் பள்ளிக்கு சென்று தீவிர சோதனை செய்தனர். பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு செய்து வாகனங் களையும் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே வழக்கம் போல் இதுவும் புரளி என காவல்துறைக்கு  தெரிந்தது. மேலும், கடந்த சில நாட்களாக  மின்னஞ்சல் மூலம் போலி மிரட்டல்கள் வருவதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இந்தப் பள் ளிக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து நெருக்கடிக்கு இடையில் ஆபத்தான நிலையில் வாரச்சந்தை

திருப்பூர், அக்.15 – திருப்பூர் முத்தணம்பாளையம் பகு தியில் நடைபெறும் வாரச்சந்தை போக் குவரத்து நெருக்கடிக்கு இடையே மிக வும் ஆபத்தான நிலையில் நடைபெறு கிறது. இங்கு பொது மக்களுக்குப் பாதிப்பில்லாமல் உரிய பாதுகாப்பு ஏற் பாடுகளை போக்குவரத்து காவல் துறை  செய்ய வேண்டும் என்று பொது மக்கள்  எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் நல்லூர் அருகே, முத்த ணம்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 4 மணி  முதல் இரவு 10 மணி வரை வார சந்தை  நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.  முத்தணம்பாளையத்தில் இருந்து கோவில்வழி செல்லும் பிரதானமான சாலையில், மாலை 4 மணிக்கு போக்கு வரத்து நெருக்கடி உள்ள நேரத்தில் குறிப்பாக பள்ளி வாகனங்கள், கனரக  வாகனங்கள், மினி லாரி வண்டிகள்,   இருசக்கர என பல வாகனங்கள் கடந்து  செல்கின்றன. இந்த நேரத்தில் சாலை யின் இரு புறங்களிலும் சிறு, குறு வியா பாரிகள், வணிகர்களால் இந்த சாலை நெருக்கடி மிக்கதாக உள்ளது. போக்கு வரத்து அதிகமுள்ளதால் பாதுகாப் பற்ற நிலையில் கூடுகின்ற சந்தைகளில் தான் மக்கள் பொருட்கள் வாங்க வந்து  கூடுகிறார்கள். இந்த நெருக்கடியான நேரங்களில், வருகின்ற 108 ஆம்பு லன்சுகள் கடந்து செல்ல முடியா மல் தத்தளிக்கிறது. 500 மீட்டர் தூரம் உடைக்கப்பட்ட இந்த சாலை களில் பல வருடங்களாக சாலை செப்ப னிடப்படாமல் குண்டும், குழியு மாக உள்ளது. இந்த சாலையின் இரு புறங்களிலும் சந்தை கடைகள்  இருப்பதால் எதிரெதிரே வருகின்ற வாக னங்கள் செல்ல முடியாமல் நின்று விடு கின்றன. இதனால் வாகன ஓட்டுனர்க ளுக்குள் வாக்குவாதம், சண்டைகள் நடப்பது தொடர் கதையாக உள்ளது.  இந்த நேரத்தில் பொது மக்கள் ஒதுங்கக்  கூட, இடம் இல்லாமல் தடுமாறுகிறார் கள், இதனால் பெரிதும் பாதிக்கப்ப டுகிறார்கள். இந்த வாரச் சந்தையைப் பாதுகாப் போடு நடத்துவதற்கு மாற்று வழி யுண்டு. சாலைகளின் இருபுறமும் போடப்படும் சந்தை கடைகளை மாற்றி  அருகிலுள்ள தெருக்களின் உட்புறம் கடைகளை போட வசதிகள் உண்டு.  ஆனால் அதை பற்றி மாநகராட்சி பரிசீ லிக்காமல் உள்ளது. பாதுகாப்பின்றி நடக்கும் இந்த வார சந்தையை பாது காப்போடு  நடத்த மாநகராட்சி நிர்வா கம், போக்குவரத்து காவல்துறை நடவ டிக்கை எடுத்து மக்கள் பாதுகாப்போடு சந்தையை உபயோகப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த  சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கைபேசியில் இயங்கும் பம்புசெட்டு:

திருப்பூர், அக.15 - கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்ப டுத்தும் கருவி, புதிய மின்மோட்டார், சிறுதானிய சாகுபடிக்கு  உழவு மானியம் வழங்குவது தொடர்பாக திருப்பூர்  வேளாண் மைப் பொறியியல் துறை தகவல் தெரிவித்து உள்ளது. விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்க ளில் வயல்வெளிகளில் உள்ள பம்புசெட்டுகளை இயக்கச் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் போது, பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகி றது. இதைத் தவிர்க்கும் வகையில், தங்களது பம்பு செட்டு களை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில்  வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள  கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து கைபேசியின் மூலம் இயக்கிடவும்,  நிறுத்திடவும் உதவுகிறது. இதற்காக ஆதிதிராவிடர் வகுப்பி னர்/ பழங்குடியினர் வகுப்பினர்/ சிறு விவசாயிகள்/ குறு  விவசாயி மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில்  50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 7ஆயிரம். மற்ற  விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது  அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.  திருப்பூர் மாவட் டத்திற்கு 250 எண்கள் மேற்படி கருவி அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது. மேலும், பழைய மின்மோட்டாரை மாற்றி  புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிக ளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் மானியமும்,  தரிசு நிலங்களில் சிறு தானிய சாகுபடிக்கு உழவு மானியமாக  அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரத்து 400 மானி யமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் திருப் பூர், உடுமலை மற்றும் தாராபுரம் வேளாண்மைப் பொறியி யல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நாளை மின்தடை 

திருப்பூர், அக்.15 - திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்  நடைபெற இருப்பதால் வரும் வியாழக்கிழமை காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்  என்று மின்வாரிய செயற்பொறியாளர் சு.ராமச்சந்திரன் கூறி யுள்ளார். இதனால் அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ்  ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவிரி வீதி, ஸ்டேன்ஸ்  வீதி, ஹவுசிங் யூனிட், முத்துச்சாமி வீதி பிரிவு, கே.ஆர்.இ.  லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி,  பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்ஜிஆர்  நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி,  சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கள்ளம்பாளையம், எஸ்ஏபி தியேட்டர் பகுதி, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந் திநகர், டி டி பி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபு ரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்காரவேலன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பிஏபி பாசன திட்டத்தை நவீனப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், அக்.15 - பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட் டத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று பல்வேறு விவசாய அமைப்புகள் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை  விடப்பட்டுள்ளது.  செஞ்சேரி புதூர் குமரன் மஹாலில் பல்வேறு விவசாய அமைப்புகளின் நிர் வாகிகள், விவசாயிகள் பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிஏபி கிளை கால்வாய் பாதுகாப்புச் சங்க நிர்வாகி வேலுச்சாமி, ஆழியாறு வடிநில விவசாயிகள் சங்க நிர்வாகி விக்ரம், நீர்ப்பாசன நிபுணர் பெரி யசாமி, விவசாயிகள் பாதுகாப்பு சங்க  நிர்வாகி ஈசன் மற்றும் பல்வேறு அமைப் புகளின் விவசாயிகள் கலந்து கொண்ட னர்.  இதில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை சீரமைப்பதற்காக ரூ 8000 கோடி செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. எனினும் இதன் விரி வான திட்ட அறிக்கையை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் வெளிப்படை யாக தெரிவிக்கவில்லை. மேலும் பழைய முறையில் பிஏபி திட்டத்தை சீரமைப்பது பயனளிக்காது.  இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளி லும், கேரளாவிலும் செயல்படுத்துவது போல குழாய் மூலம் கடைமடை பகுதி  வரை திட்டத்தை சீரமைக்க வேண்டும். குழாய் மூலம் நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்தினால் தற்போது உள்ளது  போல நீர்க்கசிவு ஏற்படாது. இத்திட்டத் தில் அனைவருக்கும் உரிய தண்ணீர் கிடைக்கும். பாசன கால்வாய்களில் குப்பை போடும் பிரச்சனை இருக் காது.  அதேபோல் ஆனைமலை ஆறு நல்ல ஆறு அணைத்திட்டத்தை உடன டியாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 250 கன அடி  மேல் நீராரிலிருந்து குழாய் மூலம் நேராக தண்ணீர் கொண்டு வந்தால் பல னளிக்கும்.  பிஏபி திட்டத்தை மறுவாழ்வு அளித்து நவீனப்படுத்துவதற்கு வலியு றுத்துவோம். இதுகுறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்போம். தேவைப் பட்டால் நீதிமன்றம் மூலம் கோரிக் கையை நிறைவேற்ற முயற்சிப்போம், என்று விவசாயிகள் கூறினர்.

கனமழையால் அமராவதி அணைக்கு  நீர் வரத்து அதிகரிப்பு

திருப்பூர், அக்.15- திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி  அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடப்பு ஆண்டு தென்மேற் குப் பருவமழையின்போது அணைக்கு நீா்வரத்து அதிக ரித்து ஜூலை 20 ஆம் தேதி அதன் முழுக்கொள்ளளவான 90  அடியை எட்டியது. தொடர்ந்து செப். 20 ஆம் தேதி வரை அணை யில் நீர் நிறைந்து இருந்தது. அதன்பின், பழைய, புதிய ஆயக் கட்டு பாசனப் பகுதிகளுக்கு அணையில் இருந்து தண்ணீர்  திறக்கப்பட்டது. இதையடுத்து அணையின் நீர் இருப்பு குறைந் தது. அதன்படி, கடந்த 10 ஆம் தேதி அணையின் நீர் இருப்பு  75 அடியாக குறைந்தது. இந்நிலையில், அணையின் நீர்ப்பி டிப்பு பகுதிகளான கேரள மாநிலம் மறையூர், காந்தலூர், கோவில்கடவு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்க ளாக பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. இதனால் ஓரிரு நாட்களில் அணை மீண்டும்  நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித் துறை யினர் தெரிவித்துள்ளனர்.

புதிய திட்டப்பணிகள்

திருப்பூர், அக்.15- உப்பிலிபாளையத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் சாலை, மழை  நீர் வடிகால் பணிக்கான துவக்க விழா நடைபெற் றது. கரைப்புதூர் ஊராட்சி, உப்பிலிபாளையம் பரமசி வன் கோயில் முன்பு ரூ.4.5  லட்சம் மதிப்பீட்டில் கான்கி ரீட் சாலை அமைக்கும் பணி,  உப்பிலிபாளையம் பெரு மாள் கோயில் அருகில்  ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில்  மழைநீர் வடிகால் அமைக் கும் பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர் ராஜேந்திரன், கரைப்புதூர் ஊராட்சித் தலைவர் ஜெயந்தி கோவிந் தராஜ், உட்பட பலர் பங்கேற் றனர்.

போக்குவரத்து நெருக்கடிக்கு இடையில் ஆபத்தான நிலையில் வாரச்சந்தை

திருப்பூர், அக்.15 – திருப்பூர் முத்தணம்பாளையம் பகு தியில் நடைபெறும் வாரச்சந்தை போக் குவரத்து நெருக்கடிக்கு இடையே மிக வும் ஆபத்தான நிலையில் நடைபெறு கிறது. இங்கு பொது மக்களுக்குப் பாதிப்பில்லாமல் உரிய பாதுகாப்பு ஏற் பாடுகளை போக்குவரத்து காவல் துறை  செய்ய வேண்டும் என்று பொது மக்கள்  எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் நல்லூர் அருகே, முத்த ணம்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 4 மணி  முதல் இரவு 10 மணி வரை வார சந்தை  நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.  முத்தணம்பாளையத்தில் இருந்து கோவில்வழி செல்லும் பிரதானமான சாலையில், மாலை 4 மணிக்கு போக்கு வரத்து நெருக்கடி உள்ள நேரத்தில் குறிப்பாக பள்ளி வாகனங்கள், கனரக  வாகனங்கள், மினி லாரி வண்டிகள்,   இருசக்கர என பல வாகனங்கள் கடந்து  செல்கின்றன. இந்த நேரத்தில் சாலை யின் இரு புறங்களிலும் சிறு, குறு வியா பாரிகள், வணிகர்களால் இந்த சாலை நெருக்கடி மிக்கதாக உள்ளது. போக்கு வரத்து அதிகமுள்ளதால் பாதுகாப் பற்ற நிலையில் கூடுகின்ற சந்தைகளில் தான் மக்கள் பொருட்கள் வாங்க வந்து  கூடுகிறார்கள். இந்த நெருக்கடியான நேரங்களில், வருகின்ற 108 ஆம்பு லன்சுகள் கடந்து செல்ல முடியா மல் தத்தளிக்கிறது. 500 மீட்டர் தூரம் உடைக்கப்பட்ட இந்த சாலை களில் பல வருடங்களாக சாலை செப்ப னிடப்படாமல் குண்டும், குழியு மாக உள்ளது. இந்த சாலையின் இரு புறங்களிலும் சந்தை கடைகள்  இருப்பதால் எதிரெதிரே வருகின்ற வாக னங்கள் செல்ல முடியாமல் நின்று விடு கின்றன. இதனால் வாகன ஓட்டுனர்க ளுக்குள் வாக்குவாதம், சண்டைகள் நடப்பது தொடர் கதையாக உள்ளது.  இந்த நேரத்தில் பொது மக்கள் ஒதுங்கக்  கூட, இடம் இல்லாமல் தடுமாறுகிறார் கள், இதனால் பெரிதும் பாதிக்கப்ப டுகிறார்கள். இந்த வாரச் சந்தையைப் பாதுகாப் போடு நடத்துவதற்கு மாற்று வழி யுண்டு. சாலைகளின் இருபுறமும் போடப்படும் சந்தை கடைகளை மாற்றி  அருகிலுள்ள தெருக்களின் உட்புறம் கடைகளை போட வசதிகள் உண்டு.  ஆனால் அதை பற்றி மாநகராட்சி பரிசீ லிக்காமல் உள்ளது. பாதுகாப்பின்றி நடக்கும் இந்த வார சந்தையை பாது காப்போடு  நடத்த மாநகராட்சி நிர்வா கம், போக்குவரத்து காவல்துறை நடவ டிக்கை எடுத்து மக்கள் பாதுகாப்போடு சந்தையை உபயோகப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த  சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளனர்.