திருப்பூர், பிப். 15 - திருப்பூரில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக் கைக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றனர். இதை வட்டாரப் போக்குவ ரத்து அலுவலர் ஆய்வுக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற் றோர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங் கள் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்க ளைக் கொண்டு மாணவ, மாணவிகளை அழைத்து வருவது அதிகரித்துள்ளது. அதே போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகரப் பகுதிகளிலும், சுற்று வட்டார புறநகர்ப் பகுதி களிலும் செயல்படும் பிரபல தனியார் மெட்ரி குலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சொந்தமாக பேருந்துகள், வேன்களை இயக்கி, மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு போக்குவரத்துத் துறை புள்ளிவிபரப்படி திருப்பூர் மாவட்டத்தில் 598 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின் றன. தனியார் பள்ளிகள் அருகாமை பகுதிக ளில் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் ஏறத்தாழ 25 கிலோமீட்டர் தொலைவு வரை பள்ளி பேருந்துகளை இயக்கி மாணவ, மாணவி களை அழைத்து வருகின்றனர். இப்பேருந்துகளில் போக்குவரத்துத் துறையிடம் வாகன உரிமத்தின் போது அனு மதி பெற்ற எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வரு வதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். வேன் உள்ளிட்ட வாகனங்களில் 25 பேர் என அனுமதி இருந்தால், 60 பேர் வரை ஏற்றிச் செல்வதாக குழந்தைகளின் பெற் றோரே புகார் கூறுகின்றனர். பேருந்துகளின் இருக்கையில் ஆரம்ப வகுப்புகள் படிக்கும் குழந்தைகள் அமர்ந் தால் சற்று கூடுதல் எண்ணிக்கையில் அமர முடியும் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு மேலும் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். சில வாக னங்களில் பெரிய வகுப்பு படிக்கும் மாணவர் களின் மடிகளில் சிறிய வகுப்பு படிக்கும் குழந் தைகளை அமர வைத்து அழைத்து வருகின்ற னர். இது பற்றி பள்ளி நிர்வாகங்களில் புகார் கூறினாலும் கண்டு கொள்வதில்லை என பெற் றோர் கூறுகின்றனர். “எங்கள் குழந்தைகள் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கின்றனர். அவர்களை பள்ளி பேருந்துக ளில் தான் அனுப்பி வைக்கிறோம். ஆனால் அமர்ந்து செல்ல இருக்கை இட வசதி இல்லா மல், கூட்ட நெரிசலில் குழந்தைகள் திணறிக் கொண்டு செல்வதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது.
இது பற்றி பல முறை பள்ளி முதல் வர், தாளாளரிடம் புகார் கூறியும் இந்த விச யத்தில் மாறுதல் செய்ய எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று பெற்றோர் வேத னையுடன் கூறினர். இது போன்ற பிரச்சனையை பல பெற் றோர்கள் கூறினாலும், பள்ளி நிர்வாகங்க ளிடம் சொன்னால் தவறாக நினைத்து விடுவ ார்களோ அல்லது குழந்தைகளிடம் பாரபட்ச மான அணுகுமுறையை காட்டுவார்களோ என்று அஞ்சி, புகார் சொல்லாமல் மௌனம் காப்பதாகவும் சிலர் கூறினர். எனவே திருப்பூர் வடக்கு, தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து வட் டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் பள்ளி பேருந்துகளை முழுமையான ஆய் வுக்கு, திடீர் சோதனைக்கு உட்படுத்த வேண் டும். விதிமுறைகளை மீறி பேருந்துகள் இயக் கப்பட்டால் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர் வாகங்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பெற்றோர்கள் எதிர் பார்க்கின்றனர். ஏதேனும் பெரும் விபரீதம் நிகழ்ந்தால் அப்போது அரசுத் துறை நிர்வாகங்கள் துடிப் போடு பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொள்வதுண்டு. வழக்கமான நாட்களில் கண் டுகொள்ளாத போக்கே தொடர்கிறது. அப்படி இல்லாமல் வட்டார போக்குவரத்துத் துறை பள்ளி பேருந்துகளின் இயக்கத்தை கவ னித்து உரிய கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.