உதகை, நவ.10- உதகையில் குளிரையும் பொருட்படுத்தாமல் நகரில் தூய் மைப் பணிகளை மேற்கொள் ளும், தூய்மைப் பணியாளர்க ளுக்கு தேவையான பாதுகாப்பு உப கரணங்கள் முறையாக வழங்கப் படாததால் பல்வேறு உடல் உபா தைகளுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நீலகிரி மாவட்டம், உதகை நக ராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மைப் பணியினை மேற் கொள்ள 80 நிரந்தரப் பணியாளர் களும், 140 ஒப்பந்த பணியாளர்க ளும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை 350க் கும் மேற்பட்ட தூய்மைப் பணியா ளர்கள் பணிபுரிந்து வந்த நிலை யில், தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் ஒப்பந்த பணியா ளர்கள் என 220 தூய்மைப் பணி யாளர்கள் மட்டுமே பணியாற்றி வரு கின்றனர். 100க்கும் மேற்பட்ட தூய் மைப் பணியாளர்கள், பணி ஓய் விற்கு முன்பே உயிரிழந்துள்ள நிலையில், புதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால், பணியாளர் கள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது, இதனால், ஆங்காங்கே குப்பைக ளும் தேங்கி வருகிறது. தற் போதுள்ள பணியாளர்களுக்கு நக ராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் வழங்கப் பட வேண்டிய கையுறை, முகக்கவ சம், கம் பூட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களோ, குளிரைத் தாங் கும் வெம்மை ஆடைகளையோ வழங்கவில்லை. அதேசமயம் கூடு தல் பணியினை மட்டும் சுமத்துவ தால் மன உளைச்சலுக்கு ஆளாவ தாக தூய்மைப் பணியாளர்கள் குற் றச்சாட்டியுள்ளனர். கொரோனா காலத்தில் தூய் மைப் பணியாளர்களுக்கு வழங்கப் பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அதற்குப்பின் வழங்கப்பட வில்லை. நூறு ரூபாய் கொடுத்து தங்களது கைகாசில் வாங்கும் கையுறைகள் 10 நாட்களுக்கு கூட தாங்காததால் வெறும் கையிலோ அல்லது கிழிந்து போன கையு றையை பயன்படுத்தி தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின் றனர். முகக்கவசம் போன்ற பாது காப்பு உபகரணங்கள் வழங்கப் படாததால் ஆஸ்துமா போன்ற சுவா சப் பிரசசனைகளும், கம் பூட் இல் லாததால் குப்பைகளில் உள்ள கண் ணாடி தகரங்கள் கால்களைக் கிழிப் பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன. நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் குளிரையும் பொருட் படுத்தாமல் சுற்றுலா நகரை தூய் மையாக வைக்க முயற்சித்து வரும், நூற்றுக்கணக்கான தூய் மைப் பணியாளர்களின் தேவையை, அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த அதே ஆதரவை தற்போது மட்டு மின்றி, எப்போதும் கொடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர் பார்பாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி கள் கூறுகையில், தூய்மைப் பணி யாளர்கள் பற்றாக்குறை, அவர்க ளது தேவைகள் குறித்து விரைந்து தீர்வு காணப்படும், என உறுதியளித் துள்ளனர்.