ஈரோடு, டிச.1- ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சட்டப்படியான கூலி வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மருத்துவ கழகத்தில் மூன்று தனியார் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, வட்டார மருத்துவமனை களில் தூய்மை உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒப்பந்த தொழிலாளர் சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் கொடுக்கிறோம் என்பது உள்ளிட்ட பலன்கள் வழங் கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி 8 மணி நேர வேலை, வார விடுப்பு, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட் டவை வழங்கப்பட வேண்டும். ஆனால் அதன் படி எதுவும் வழங்கப்படு வதில்லை. மேலும், பிஎப், இஎஸ்ஐக்கு செலுத்த வேண்டிய தொகையையும் தொழிலா ளியிடமே பிடித்தம் செய்யப்படுகிறது. சம்பளத்திற்கான ரசீது வழங்கப்படு வதில்லை. பணியாளருக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தூய்மை தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நடவடிக்கையை கண்டித்து தொழிலா ளர்கள் செவ்வாயன்று மாலை முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.