districts

img

சனாதனம் வேறு, இந்து மதம் வேறு

ஈரோடு, மார்ச் 3- சனாதனம் வேறு, இந்து மதம்  வேறு என்ற புரிதலை இளைஞர்க ளிடம் ஏற்படுத்த வேண்டும் என ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி குறிப்பிட்டார். சமூகநீதிக் கூட்டமைப்பு மற்றும்  புதுமலர் பதிப்பகம் சார்பில், இந்து  தமிழ் திசை வெளியீடான, ‘என்றும்  தமிழர் தலைவர் ’ நூல் அறிமுக விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, சமூகநீதிக் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார். ஈரோடு மாநகர  திமுக செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.  விழாவில், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அப் போது, ‘தேவையான நேரத்தில், தேவையான நூலை இந்து தமிழ்  திசை வெளியிட்டுள்ளது. தமிழக கிராமப்புறங்களில் உள்ள கோயில் களில் கூட சமஸ்கிருத வழிபாட்டு முறை உள்ளது. இதனை மாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு தமி ழில் பெயர் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சனாதனம் வேறு, இந்து மதம் வேறு என்ற புரி தலை, இளைஞர்களிடம் ஏற்படுத்த  வேண்டும். அதற்கு பெரியார் தொடர்பான புத்தகங்கள் தேவை யாய் உள்ளன என்றார். இதனைத் தொடர்ந்து, பெரியா ரின் பேரனும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவி கேஎஸ். இளங்கோவன் பேசுகை யில், ‘பெரியாரைப் பற்றி நூற்றுக் கும் மேற்பட்ட புத்தகங்களை நான்  படித்துள்ளேன். அவற்றில் என்  மனம் கவர்ந்த நூலாக, ‘என்றும் தமி ழர் தலைவர் ’ நூல் அமைந்துள் ளது. பெரியாரின் வரலாறு மட்டு மல்ல, பெரியாரைப் பற்றி முழுமை யாக அறிய இந்த நூல் உதவும். உங்கள் வீடுகளில் இந்த நூல் ஒரு  பொக்கிஷமாக இருக்கும் ‘ என் றார். நிகழ்ச்சியில், ’என்றும் தமிழர் தலைவர் ’ நூலினை அறிமுகம் செய்து, திராவிட இயக்க தமிழர்  பேரவை தலைவர் சுப.வீரபாண்டி யன் பேசுகையில், எதிர்காலத்திற் கும் பொருத்தமாக இருக்கும் வகை யில், ‘என்றும் தமிழர் தலைவர்’ என  நூலிற்கு இந்து குழுமம் பெயர் வைத்துள்ளது.  பெரியார் வாழ்ந்த காலத்தி லேயே பல அவமரியாதைகளைச் சந்தித்துள்ளார். பாராட்டிற்கு மயங் காமல், வசவுகளுக்கு வருத்தப்ப டாமல் பெரியார் தன் கடமையை  தொடர்ந்து செய்து வந்தார். எதை யும் மறைக்காத குணம் கொண் டவராக பெரியார் வாழ்ந்தார். பெரி யார் சிலைகளிலோ, மணிமண்ட பங்களிலோ வாழவில்லை. தனது கருத்துக்களால்தான் தொடர்ந்து வாழ்கிறார் என பேசினார். இதனைத் தொடர்ந்து, ஆய்வ றிஞர் வீ.அரசு, திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, திராவிடர் கழக  அமைப்புச் செயலாளர் சண்முகம், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ்குமார், ரவி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இந்து தமிழ் திசை நாளிதழின் துணை ஆசிரியரும், ‘என்றும் தமிழர் தலைவர்’ தொகுப்பாசிரியர் ஆதி வள்ளியப்பன் ஏற்புரையாற்றினார்.