districts

img

சேலம் உருக்காலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.27- போனஸ் பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு சேலம் உருக் காலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தம் மற்றும் போனஸ் பேச்சுவார்த் தையை விரைந்து முடிக்க வேண்டும். 39 மாத அரியர்ஸ் தொகையை உடனடி யாக வழங்க வேண்டும். தொழிலா ளர் விரோதப்போக்கை கைவிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, சிஐடியு சேலம் உருக்காலை தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளி யன்று அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருக்காலை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் பொரு ளாளர் பாலாஜி தலைமை வகித்தார். இதில் பொதுச்செயலாளர் சுரேஷ்கு மார், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னர் பி.பன்னீர்செல்வம் உட்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.