districts

img

சேலம் உருக்காலை தொழிலாளர்கள் தர்ணா

சேலம், அக்.14- ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, சேலம் உருக்காலை தொழிலாளர்கள் தர்ணா வில் ஈடுபட்டனர். செயில் நிறுவன ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் உள் ளிட்ட பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் உருக்காலை தொழிலாளர்கள் திங்களன்று ஆலை நுழைவாயில் முன்பு  தர்ணாவில் ஈடுபட்டனர். அனைத்து தொழிற்சங்கம் சார்பில்  நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலை வர் டி.உதயகுமார், உருக்காலை சங்க பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் வி.கே. நல்லமுத்து, விசிக தெற்கு மாவட்டச் செயலாளர் ந.வி.தமி ழன், பிஎம்எஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், தொமுச  துணைத்தலைவர் ஜி.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.