துப்பாக்கிச்சூடு: போலீசார் விசாரணை
சேலம், ஜன.4- குடும்பத்தகராறில் மருமகன், மாமனாரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மருமகன் சௌந்தர்ராஜன். நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர்களுக்கிடையே சொத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இந்நிலையில், வியாழனன்று விடியற்காலை அவரது வீட்டின் அருகே அரளி பூ தோட்டத்தில் சௌந்தராஜன் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் வெள்ளையன் இடது பக்க முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராசிபுரம் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன் மேல் சிகிச் சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நாமகிரிப் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
திருச்செங்கோடு முழுவதும் 350 ‘சிசிடிவி’
நாமக்கல், ஜன.4- திருச்செங்கோடு நகரம் முழுவதும் அமைக்கப்பட்ட 350 கண்காணிப்பு கேமராக் கள் விரைவில் செயலாக்கதிற்கு வரும் என ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ் வரன் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச் செங்கோடு நகரம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் பாது காப்புக்காகவும், நகரின் எதிர்கால கட்ட மைப்பு தேவைக்காகவும், 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தொடங் கப்பட்டது. ஆங்காங்கே சாலைகள் அமைக் கும் பணி நடந்ததால் கண்காணிப்பு கேமரா நிறுவுவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. நிறுவிய இடங்களில் சில குறைபாடுகள் இருப்பதாக புகார் வந்ததன் பேரில் அதனை ஆய்வு செய்து மீண்டும் பணிகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டிற்கு வரும், என்றார்.
முன் மாதிரி விருது பெற திருநங்கைகளுக்கு அழைப்பு
சேலம், ஜன.4- திருநங்கையருக்கான முன் மாதிரி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன என சேலம் ஆட்சியர் செ.கார்மேகம் தெரி வித்துள்ளார். திருநங்கையர் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி யுள்ளனர். மேலும் சாதனை படைத்த திரு நங்கையரை கௌரவிக்கும் வகையில் திரு நங்கையர் தினமான ஏப்.15 ஆம் தேதியன்று திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறுவோ ருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படுகிறது. விண்ணப் பதாரர்கள் தங்களது கருத்துருக்களை பிப்.28 ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை சமர்ப் பிக்க வேண்டும். கருத்துருக்களில், பொரு ளடக்கம் மற்றும் பக்க எண், சுய விவரம் (Bio Data), பாஸ்போர்ட் அளவு புகைப் படம் -2, விருதுகளின் விவரம் (விருது பெற்றி ருப்பின் அதன் விவரம் விருதின் பெயர், யாரி டமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்), சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப் படங்களுடன், சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பை இணைக்க வேண்டும். மேலும், சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூகப் பணியாளர் இருப்பிடத் தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலி ருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று உள்ளிட் டவை தயார் செய்யப்பட்டு தலா 2 நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம் முள்ளுவாடி ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவு
சேலம், ஜன.4- சேலம், முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலப் பணிகள் தற்போது நிறை வடைந்துள்ள நிலையில், மேம்பாலத் தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆய்வு செய்தார். சேலம் மாநகரத்தில் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலப் பணிகள், கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு காரணங்களால் பெரிய அளவுக்கு முன் னேற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், திமுக அரசு பொறுப் பேற்ற பிறகு, மேம்பாலப் பணிகள் நிறை வடைந்துள்ளது. இதனையடுத்து, மேம் பாலத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆய்வு செய் தார். இதன்பின் அவர் செய்தியாளர்களி டம் கூறுகையில், கடந்த ஆட்சிக்காலத் தில் நில எடுப்பு எடுக்கப்பட்டாலும், அந்த மக்களுக்கான செட்டில்மெண்ட் சரியாக தரவில்லை. பாதிக்கப்பட்டவர் கள் உச்சநீதிமன்ற வரை சென்றனர். திமுக அரசு பதவியேற்ற பிறகு பாதிக் கப்பட்ட மக்களை அழைத்து பேசி, உட னடியாக இழப்பீடு வழங்கப்பட்டு, வெற் றிகரமாக பாலத்தின் பணிகள் நிறைவ டைந்துள்ளது. சேலத்தின் மையப்பகுதியில் சேலம் வடக்கு, தெற்கு என இரண்டு பகுதி களாக பிரிக்கும் பகுதியை இன் றைக்கு இணைக்கக்கூடிய ஒரு பால மாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணிகள் முடிந்துள்ளது. இந்த பாலம் சேலத்தினுடைய அடையாளமாக இருக் கும், விரைவில் இந்த பாலம் திறக்க இருக்கின்றது. இந்த பணிகள் முற்றிலு மாக முடிவுற்றுள்ளது. மீதி இருக்கிற பணிகளையும் நம்முடைய மாவட்டத்தி னுடைய பொறுப்பு அமைச்சர்கள் மூலம் முடிக்கப்பட்டு உள்ளது. மேலும், அம் பேத்கர் சிலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை புதிய பாலத்திற்கான நில எடுப்பு பணிகள், தற்போது நடை பெற்று வருகிறது. அந்தப் பணிகளும் விரைவில் முடிக்கப்படும், என்றார்.
திருப்பூரில் இளைஞர் வெட்டிப் படுகொலை
திருப்பூர், ஜன. 4 - முன்பகை காரணமாக திருப்பூரில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட் டது தொடர்பாக மூன்று பேர் கொண்ட கும்பலைப்பிடிக்க 3 தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் வெள்ளியங்காடு அருகில் உள்ள திரு.வி.க.நகர் நாவிதன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (42) இவர் வேலைக்குச் சென்று விட்டு, வீட்டிற்கு செல்வதற்காக புதனன்று திரு.வி.க. நகர் முதல் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பாலமுருகனை வழிமறித்து தலையில் சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தெற்கு காவல் துறையினர் வெட்டுப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு உயிரிழந்த பாலமுருகனின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்ட னர். மேலும், மோப்பநாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மோப்பநாய் ஹண்டர் சிறிது தூரம் சென்று மீண்டும் கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கே திரும்பி வந்தது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து போன பாலமுருகன் பல்வேறு கொலை வழக்கு களில் தொடர்புடையவர் என்றும், பழிக்கு பழி வாங்கும் விதத் தில் இக்கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் மூன்று தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி யில் கொலை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துகளை தடுக்க, சாலையோர செடிகளை அகற்றுக
உடுமலை, ஜன. 4- வளைவில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில், சாலையோரத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்ச்செடிகளை அப்புறப்படுத்தி விபத்து நடைபெறாமல் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை, மடத்துக்குளம் பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலூகா பகுதிக ளில் கிராமப்புற இணைப்பு சாலைகள் ஏராளம் உள்ளது. இந்த சாலைகளின் இரண்டு புறங்களிலும் விபத்து ஏற்படும் வகை யில், செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர்களாக பரவிக்கி டக்கிறது. சாலையின் ஓரத்தில் உள்ளதால், கன மழையால் சாலை ஓரங்களில் மண் அரிப்பு எற்பட்டு எதிர் வரும் வாக னங்களுக்கு வழிவிட சாலை ஓரம் செல்கையில், வாக னங்கள் சரிவில் விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. மேலும், சிறு வளைவில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு சாலைகளின் ஓரத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந் துள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விபத்து களை தடுக்க உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் சாலையோரத்தில் புதர் மண்டியுள்ள செடிகளை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பூர்,ஜன.4 அவுட்சோர்சிங் விடுவதை கண் டித்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அவுட்சோர்சிங் முறையை கை விட வேண்டும், கிராம ஊராட்சி செயலா ளர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வரையறுக்கப்பட்ட ஓய்வூதி யம் மற்றும் பணிக்கொடை உள் ளிட்ட விடுப்பு உரிமைகளை உடன டியாக வழங்க வேண்டும், எம்ஜி என்ஆர்இஜிஏ கணினி உதவியாளர் அனைவருக்கும் பணி வரைமுறைப் படுத்துதல், மேம்படுத்தப்பட்ட ஊதி யத்தை உடனே வழங்குக, இணை இயக்குநர், உதவி இயக்குநர், உதவி பொறியாளர், மற்றும் ஒன்றிய பொறியாளர் பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்டு 18 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் டி.சாந்தி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.செந்தில்கு மார் உரையாற்றினார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை, மற்றும் உள்ளாட் சித் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் ஆ. மணியன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் நிறைவுரையாற்றினார். முடி வில், சங்கத்தின் மாவட்டப் பொருளா ளர் கே.சரவணன் நன்றி கூறினார்.
திமுகவினரின் வழக்கு ரத்து
திருப்பூர், ஜன. 4- கடந்த அதிமுக ஆட்சி யின் போது 2020 ஆம் ஆண்டு நவ.22ஆம் தேதி மயிலாடு துறை மாவட்டத்தில் தற்போ தைய திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரி வித்து திருப்பூர் வீரபாண்டி பேருந்து நிறுத்தம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதற் காக அப்போதைய வீர பாண்டி காவல்துறையினர் திமுகவைச் சேர்ந்த 54வது வார்டு செயலாளர் மோகன் ராஜ் உட்பட 17 பேர் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு கடந்த 3 ஆண் டுகளாக திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் ஒருவர் கைது
சூலூர், ஜன.4- சூலூரில் டாஸ்மாக் கடையில் வேலை செய்யும் ஊழியரை பாட்டிலை கொண்டு தாக்கிய நபரை போலீசார் கைது செய்த னர். கோவை மாவட்டம், சூலூர் கலங்கல் பாதையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சண்முகம் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகி றார். இந்நிலையில், புதனன்று இரவு சண்முகம் பணியில் இருந்த போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், தன்னிடம் பணம் இல்லை எனவும் கூகுள் பே செய்வதாக கூறியுள் ளார். அதற்கு சண்முகம், கூகுள் பே வசதி டாஸ்மாக்கில் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால், தனக்கு மது வேண் டும் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஆவே சமடைந்த நபர், அருகில் இருந்த காலி பாட்டிலை எடுத்து, விற்பனையாளர் சண்முகத்தின் முகத்தை குறிபார்த்து தாக்கி னார். இதில் சண்முகத்தின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டி யது. அதிர்ச்சியில் சண்முகம் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சண்முகத்திற்கு மூக்கில் மூன்று தையல் போடப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, தன்னை தாக்கிய நபர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என சண்முகம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சூலூரைச் சேர்ந்த பிரவீன்குமார் (30) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைத்தனர்.
வாகன ஓட்டிக்கு வழிவிட்ட காட்டு யானை
கோவை, ஜன.4- கோவை அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற காட்டு யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தற்போது 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால் கேரள வனப் பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தமிழக வனப்பகு திக்குள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் புதனன்று அதிகாலை கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்ப குதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, தாளி யூர் பகுதி வழியாக வடவள்ளி தொண்டாமுத்தூர் பிரதான சாலைக்கு வந்தது. பின்னர் வடவள்ளி வரை சாலை யிலேயே வந்த ஒற்றை காட்டு யானை ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் வடவள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய காட்டு யானை நேரு நகர் வழியாக கனுவாய் சாலையில் சென்று மருதமலை வனப்பகுதிக்குள் சென்றது. இதனிடையே வட வள்ளியில் இருந்து நேரு நகர் வழியாக பிரதான சாலை யில் நடந்து சென்றபோது, எதிரே இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் வருவதை பார்த்த யானை சாலை ஓரத்தில் ஒதுங்கி நின்றது. பின்னர் இருசக்கர வாகனம் சென்ற பின்னர் சாலை யில் நடந்து சென்றது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த நிலை யில், தற்போது அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.
பள்ளி வளாகத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்
நீலகிரி, ஜன.4- நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதி யில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. பள்ளி வளாகத்தில் சமையல் பொருட்கள் வைக்கும் இருப்பு அறை உள்ளது. இந்த அறையின் கதவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடைத்த காட்டு யானைகள் அரிசி மூட்டையை எடுத்துச் சென்றது. தொடர்ந்து மறுநாள் இரவும் அதே பள்ளிக்கு யானைகள் வந்த நிலையில், வனத்துறை யினர் அங்கிருந்து விரட்டினர். அதனைத்தொடர்ந்து, உடைக்கப்பட்ட அறை பரா மரிப்பு செய்யப்பட்டு, மீண்டும் அதில் சத்துணவு சமையல் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டது. இந்நிலையில், புத னன்று இரவு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானை கள், மீண்டும் சத்துணவு பொருட்கள் இருப்பு அறையின் கதவை உடைத்து, ஒரு மூட்டை அரிசியை தூக்கிச் சென் றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையி னர், யானைகளை அங்கிருந்து விரட்டினர். மூன்றாவது முறை யாக பள்ளி வளாகத்திற்கு யானைகள் வந்ததால், மாணவர் கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பள்ளி வளாகத்தை சுற்றிலும் யானை கள் வராமல் இருக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு கல்லூரியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக
கோவை, ஜன.4- அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோவை கிளை சார்பில் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை அறி வியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் ஆகிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரி யத்தால் பணி நியமனத்திற்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை எனவும், உடனடியாக பணி நியமன நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு கல் லூரி ஆசிரியர் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று (வியாழனன்று) முதல் ஐந்தாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை அரசு கலை கல்லூரியில் கையெழுத்து இயக்கம் கோவை மாவட்ட கிளை சார்பில் நடைபெற் றது. இதில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலரும் கையெழுத்திட்டனர்.
கோவை சரகத்தில் 16 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
கோவை, ஜன.4- கோவை சரகத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 16 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற் றம் செய்து டிஐஜி சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக டிஐஜி சரவண சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம், ஈரோடு தெற்கு காவல் நிலையத்துக்கும், பெரியநாயக் கன்பாளையம் காவல் ஆய்வாளர் தாமோதரன், ஈரோடு மாவட்டம் பவா னிக்கும், பவானி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மதுக்கரைக்கும், திருப்பூர் மாவட்டம், உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், பெரி யநாயக்கன்பாளையத்துக்கும் பணி யிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, நீலகிரி மாவட்டம், மசி னகுடி காவல் ஆய்வாளர் திருமலை ராஜன், கோவை மாவட்ட குற்றப் பிரி வுக்கும், கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடேஸ் வரி, கூடலூர் மகளிர் காவல் நிலையத் துக்கும், கோவை மாவட்ட தீவிர குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சங்கீதா, நீலகிரி மாவட்டம், கொலக்கொம் பைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள் ளனர். மேலும், கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் அன்னம், ஈரோடு மாவட் டம் பவானிசாகருக்கும், மேட்டுப்பா ளையம் காவல் ஆய்வாளர் நவநீதகி ருஷ்ணன், ஈரோடு தாலுகா காவல் நிலை யத்துக்கும், தொண்டாமுத்தூா் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்துக்கும், கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் முத்துமாரியம்மாள், உதகை மக ளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றப் பட்டுள்ளனர். கோவை சரகத்தில் உள்ள 16 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய் யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்கள் உடனடியாக அந்தந்த காவல் நிலை யங்களில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் டிஐஜி சரவணசுந்தர் உத்தர விட்டுள்ளார்.
ஈரோட்டில் மின்தடை
ஈரோடு, ஜன. 4- திங்களுர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராம ரிப்புப்பணி இன்று (5.01.2024) நடைபெற உள்ளதால், பெருந் துறை கோட்டத்தைச் சேர்ந்த திங்களுர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரேநகர், பாப்பம்பாளையம், மந்திரி பாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாக வுண்டண்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம், மேட் டூர், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளை யம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய் கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத் துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்க னூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளை யம், எல்லப்பாளையம், கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீந கர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப் பட்டுள்ளது.
நகை திருட்டு : ஒருவர் கைது
கோவை, ஜன.4- கோவையில், கடந்த டிச. 8 ஆம் தேதி சிங்காநல்லூர் அருகில் திருமண மண்டபத்தில், 5 சவரன் நகையை திருடியதாக புகார் கொடுத்தனர். இதனை, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகை யில் நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் திருட்டில் ஈடுபட்டவர் என்பது உறுதியானது. அவரி டமிருந்து திருடப்பட்ட 5 சவரன் தங்க நகையை பறிமு தல் செய்து, கைது செய்தனர்.
2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட வீடு கட்டும் பணி பனியர் சமூக பழங்குடியின மக்கள் வேதனை
உதகை, ஜன.4- பாதிரிமூலாவில் இரண்டு ஆண்டுகளாக கட்டாமல் நிறுத்திவைத்துள்ள வீட்டை, உடன டியாக கட்டித்தர வேண்டும் என பாதிகப்பட்ட பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட, பகுதியில் அமைந்துள்ளது பாதிரிமூலா என்ற பழங் குடியின கிராமம். இங்கு பனியர் சமுதாயத் தைச் சேர்ந்த மூன்று பழங்குடியின குடும்பங் கள், கடந்த பல தலைமுறைகளாக குடியி ருந்து வருகின்றனர். இவர்களின் வீடுகள் உடைந்து சிதிலமடைந்து காணப்பட்டதால், ஊராட்சி நிர்வாகம் புதிதாக வீடு கட்டித்தரு வதாக உறுதியளித்தது. அதற்கான பணியும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த வீடுகளும் இடிக்கப்பட்டு, தற்காலிக குடிசை கள் அமைத்து குடியேறினர். ஆனால், வீடு கட்டும் பணி துவக்கி அடித்தளம் அமைத்தது டன், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பணியை நிறுத்திவிட்டார். இதனால் இரண்டு ஆண்டுகளாக பாது காப்பற்ற, தற்காலிக குடிசைகளில் மூன்று குடும்பத்தினரும் குடியிருந்து வருகின்ற னர். இங்கு அடிக்கடி யானைகள் வந்து செல் லும் நிலையில், ஒரு வீட்டை இரண்டு முறை யானை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. மேலும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சிர மப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வார்டு கவுன்சிலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், இக்கிராமத்தை ஒட்டிய அத்திச்சால் பழங்குடி யின கிராமத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், இந்த கிராமத்தை கண்டுகொள்ளா மல் சென்றது, மக்கள் மத்தியில் கடும் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அடுத்த மழை காலத்திற்குள்ளாவது, தங்களுக்கு வீடு கட்டும் பணியை நிறைவு செய்து தர வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை வைத்துள்ள னர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி முடிவு எடுக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
ஈரோடு, ஜன. 4- கீழ்பவானி வாய்க்காலினை பலப்படுத்துவது தொடர் பாக, உயர்நீதிமன்ற உத்தரவின் வரம்பிற்குள் மட்டுமே எந்த முடிவும் எடுக்கப்படும் என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கீழ்பவானி வாய்க்காலினை பலப்படுத்துவது குறித்து விவசாயிகள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வா கம் சார்பில் ஒருமித்த கருத்தை உருவாக்கி பணிகளை மேற்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை மற்றொரு தரப்பு கண்டித்தது. அத்துடன் அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றனர். இதுகுறித்து அமைச்சர் சு.முத்துசாமியிடம் கேட்டபோது, எல்.பி.பி. கால்வாய் நவீனமயமாக்கல் பணிக்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் பேரணி நடத்தினர். அதனால், டிச.25ல், பேச்சு வார்த்தை நடத்தினோம். அதில் திட்டத்தை நவீனமய மாக்குவது தொடர்பான அரசாணையை உறுதி செய்யும் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. ஆகவே பேச்சுவார்த்தை நடத்துவது நீதிமன்ற அவ மதிப்பாகது. உயர்நீதிமன்ற உத்தரவின் வரம்பிற்குள் மட்டுமே எந்த முடிவும் எடுக்கப்படும். உண்மையில், திட்டத்தின் எதிர்ப் பாளர்களும் ஆதரவாளர்களும், திட்டத்தின் கீழ் தொடங்கப் பட வேண்டிய பணிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர். மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தவிர்க் கவும், பணிகள் சுமூகமாக நடப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். திட்டப் பணிகளில் ஏதேனும் மாற்றங்க ளைச் செய்ய முடியுமானால், உயர்நீதிமன்றத்தின் ஒப்புத லைப் பெற்ற பிறகே அது செய்யப்படும் என்று தெரிவித்தார்.