சேலம், ஏப்.1- அடிப்படை வசதிகள் செய்து தர வலி யுறுத்தி பொதுமக்கள் சேலம் மாநக ராட்சி அலுவலகத்தில் மேயர் காரின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி ஐம்பதாவது கோட்டத்துக்குட்பட்ட ஜாரி கொண்ட லாம்பட்டி பகுதியில் ஆயிரம் குடும் பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல், இப்பகுதி மக்கள் அவதியுற்று வந்தனர். மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 30 அடி சாலையை ஒரு சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் சாலை வசதியும் இல்லாமல் இருக்கின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி நிர்வா கத்திடமும் மண்டலக் அலுவலகத் திலும் ஏற்கனவே பலமுறை புகார் தெரி வித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அப் பகுதியை சேர்ந்த மக்கள் கொண்ட லாம்பட்டி மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலி யுறுத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில் இதுவரை நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது சாக்கடை நீர் வீட்டிற்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்த மக்கள் சனியன்று சேலம், மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த்து, திடீரென மேயரின் காரின் முன்பு அமர்ந்து போராட்ட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து, தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மேயர் ராமசந்திரன் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.