districts

img

மாறுபட்ட இதயத்துடிப்பை கதிரியக்க சிறப்பு சிகிச்சை முறையில் சரிசெய்து சேலம் அரசு மருத்துவமனை சாதனை!

சேலம், நவ 21- சேலம் அரசு மருத்துவமனையில், மாறுபட்ட இதயத்துடிப்பை கதிரியக்க  சிறப்பு சிகிச்சை முறையில் முழுவது மாக சரிசெய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின் றனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி  தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக் கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து உயர் சிகிச்சை பெரும் இடமாகவும் சேலம் மருத்துவமனை விளங்கி வரு கிறது. இந்நிலையில், சேலம் அரசு  மருத்துவமனையில் இருதயவியல் துறை மருத்துவர்கள், “அரித்மியா”  எனப்படும் மாறுபட்ட இதயத்துடிப்பை கதிரியக்க சிறப்பு சிகிச்சை முறையில்  முழுவதுமாக சரி செய்து சாதனை செய் துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சோபனேஸ்வரி (30), ராதிகா (40) ஆகிய இருவரும் சீரற்ற இதய துடிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு, அதற்கான மாத்திரைகளை கடந்த எட்டு  மாதங்களாக சாப்பிட்டு வந்தனர். இந்த  நோயினால் அடிக்கடி படபடப்பு, தலை சுற்றல், மயக்கம் மற்றும் மூச்சுத்தி ணறல் போன்ற தொந்தரவுகளால் அவ திப்பட்டு வந்தனர். இந்த நோயினால் சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை  துடிக்க வேண்டிய இதயம், 150 முதல்  300 முறை துடிக்கும். அதனால், அவர்க ளுக்கு பிற்காலத்தில் இருதய செய லிழப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே இதனை தடுக்க  இருவருக்கும் கடந்த திங்கள் சேலம்  அரசு மருத்துவமனையில் இருதய பிரி வில் அனுமதிக்கப்பட்டு, செவ்வா யன்று இருவருக்கும் ‘எலக்ட்ரோ பிஸி யாலஜி’ எனப்படும் நவீன ஆய்வு  மூலம் நோயின் தன்மை கண்டறி யப்பட்டு, அதனை கதிரியக்க சிறப்பு சிகிச்சை முறை மூலம் முழுவதுமாக குணமடைய செய்துள்ளனர். அதன்படி இருதயவியல் துறை மருத்துவர்கள் குழு எலக்ட்ரோ பிசியாலஜி பரிசோ தனை மற்றும் கதிரியக்க சிறப்பு  சிகிச்சை ஆகியவற்றை வெற்றிகரமாக  மேற்கொண்டனர். மேலும், இருவருக் கும் இனிவரும் காலங்களில் மாத்திரை கள் உட்கொள்ள வேண்டிய அவசியம்  இல்லை. மறுமுறை இந்த நோய்க்கான  அறிகுறியும் வராமல் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய நவீன சிகிச்சை முறை  மேற்கொண்ட இருதயத்துறை மருத்து வக்குழுவிற்கு, மருத்துவமனை முதல் வர் தேவி மீனாள் பாராட்டு தெரிவித் தார். இந்த நோய்க்கான சிகிச்சை  முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட் டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார்  மருத்துவமனைகளில் இந்த சிகிச் சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். இதுவரை சேலம் அரசு மருத்துவமனை யில் உள்ள இருதயத்துறை மூலம்  13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ ருக்கு ஆஞ்சியோகிராம், 2500க்கும்  மேற்பட்டோருக்கு அன்ஜியோப் ளாஸ்டி மற்றும் 200க்கும் மேற்பட்டோர் நிரந்தர பேஸ்மேக்கர் சிகிச்சைகள் மூலம் பயன்பெற்றுள்ளனர் என, அரசு  மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரி விக்கப்பட்டுள்ளது.