districts

வரி நிலுவைகளை வசூலிக்கும் பணி: சேலம் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்

சேலம், பிப்.14- சேலம் மாநகராட்சியில் சொத்து, குடி நீர், தொழில் வரி நிலுவையை வசூலிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்ட லாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்கள் உள் ளன. இந்த நான்கு மண்டலங்களிலும் 2.45 லட் சத்துக்கு மேல் வீடு, கடைகள், வணிக நிறு வனங்கள் உள்ளன. மாநகராட்சி மைய  அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்க ளிலும் 750க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். சுகாதாரத்துறையில் 1500க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வரு கின்றனர். வரி வசூலை கொண்டே பணி யாளர்களுக்கு சம்பளம், நிர்வாக நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூர மங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலங்களில் நிலுவை யில் உள்ள சொத்து வரி, குடிநீர்வரி, கடை வாடகையை வசூலிக்கும் பணியில் வரி வசூ லிப்பவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வரு கின்றனர். வரி செலுத்தாமல் நீண்ட நிலுவை யாக வைத்துள்ளவர்களை கண்டறிந்து அவர் களுக்கு நோட்டீஸ் வழங்கியும், அவ்வாறு செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு, சீல் வைப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற னர். கடந்த சில நாட்களாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளை சீல் வைத்தும் வரு கின்றனர். இதனிடையே, கொண்டலாம்பட்டி மண்டலம், 60 ஆவது வார்டுக்குட்பட்ட சீல நாயக்கன்பட்டியில் 5 தனியார் பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் சொத்து வரியை செலுத்த வில்லை. இதையடுத்து மண்டல வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரன், பணியாளர்கள் அந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்று சீல்  வைத்தனர். உடனடியாக பெட்ரோல் பங்க் கின் நிர்வாகிகள் சேலம் மாநகராட்சி அதி காரிகளிடம் பேசினர். அப்போது ஒரு நாளில் சொத்து வரி நிலுவையை செலுத்தி விடுவ தாக தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரி களின் அறிவுரையின் பேரில், வருவாய் அதி காரிகள் பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைத் ததை நீக்கினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சியில் நான்கு மண் டலங்களிலிருந்து சொத்து வரி, தொழில் வரி  மூலம் பணியாளர்களுக்கு ஊதியம், வளர்ச் சிப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. ஒரு வருடத்திற்கு மேல் சொத்து, குடிநீர், தொழில் வரி நிலுவையில் வைத்துள்ளவக களுக்கு அந்தந்த மண்டலத்துக்குட்பட்ட வரு வாய் அதிகாரிகள், வரி வசூலிப்பவர்கள் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டும், நிலுவை வரியை வசூலிக்கும் பணி தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆணையர் அறிவுரையின் பேரில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சேலம் மாநக ராட்சி அனைத்து வரி வசூல் மையங்களும் திறந்திருக்கும். எனவே சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகை மற்றும் கடை வாடகை அனைத்து நிலுவை தொகைக ளையும் செலுத்தி கொள்ளலாம், என்றார்.