சேலம், மே 2- மலைவாழ் பெண்கள் உறுப்பினர்களாக உள்ள மகளிர் நலச்சங்கத்திற்கு சொந்தமான நிலத்தினை மோசடி செய்து, விற்பனை செய்தவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதிக் குட்பட்ட கோவில்புத்தூர் பகுதி மேல்நாடு, கீழ்நாடு மலைவாழ் மகளிர் நலச்சங்கத்திற்கு சொந்தமாக 5.68 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இந்நிலத்தை அச்சங்கத்தின் தற்காலிக தலைவராக இருந்த சூழங்குறிச்சி லட்சு மணன், பொருளாளர் மல்லிகா, கோவில்பு தூர் சிவாஜி ஆகியோர் சங்கத்தை புதுப்பிப்ப தாக தெரிவித்து, உறுப்பினர்களை ஏமாற் றியும், சிலரது கை ரேகைகளை இட்டும் விற் பனை செய்துள்ளனர். இதனைக்கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநி லப் பொருளாளர் எ.பொன்னுசாமி தலை மையில் போராட்டம் நடைபெற்றது. அப் போது, பத்திரப்பதிவு சட்டத்திற்கும், சங்க பதிவு சட்டத்திற்கும் எதிராக இந்த பத்தி ரப்பதிவு நடந்துள்ளது. இதற்கு உடந்தை யாக செயல்பட்ட பத்திரப்பதிவு எழுத்தா ளர், துணை பதிவுத்துறை அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற போலியான பத்திரப்பதிவிற்கு துணையாக உள்ள ஆத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மீது நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். முன்னதாக, மலைவாழ் மக்கள் சங்க மாநி லத் தலைவர் பி.டில்லிபாபு கண்டன உரை யாற்றினார். இதில் மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.கிருஷ்ண மூர்த்தி, பி.ஆர்.மாதேஸ்வரன், செயலாளர் பி.சின்னமணி, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், எ.ராம மூர்த்தி, கல்வராயன் மலை செயலாளர் எ. பாக்கியராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எ.அன்பழகன், வாலிபர் சங்க செய லாளர் தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.