districts

img

வெள்ளக்கோவிலில் ரூ.41 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனை

திருப்பூர், டிச.2-  வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற் பனைக் கூடத்தில் ரூ.41 லட்சத்துக்கு கொப் பரை தேங்காய் விற்பனை நடைபெற்றது.  வெள்ளக்கோவில், திண்டுக்கல், வாணி யம்பாடி, பழனி, கரூர், முத்தூர் பகுதி விவசா யிகள் 106 பேர். 44 ஆயிரம் கிலோ எடை கொண்ட 869 கொப்பரை தேங்காய் மூட்டை களை, வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை  விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்திருந் தனர்.  விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாரி யப்பன் முன்னிலையில் முத்தூர், வெள்ளக் கோவில், காங்கயம், ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 14 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் முதல் தர கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ 106.65 ரூபாய்க் கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 77.50 ரூபாய்க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 41 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கு  வர்த்தகம் நடைபெற்றது.